3வது நாளில்.. பெங்களூர் புத்தக திருவிழா.. தள்ளுபடி விலையில் புக் வாங்க நல்ல சான்ஸ்
பெங்களூர்: குயின்ஸ் சாலையில் அமைந்துள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடைபெறும் பெங்களூர் புத்தகத் திருவிழா இன்று மூன்றாம் நாளை எட்டியுள்ளது. தமிழ் புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், கல்வியாளர்கள் எனப் பலரும் தங்களது ஆர்வத்தைப் பொங்க வெளிப்படுத்தி வருகின்றனர்.
தள்ளுபடி விலையில் புத்தகங்கள்: பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதுடன், அனைத்து புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதால், புத்தக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குழந்தைகளுக்கான கல்வி நிகழ்ச்சிகள்: குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் வகையில், விளையாட்டு, தமிழ் கலாச்சார நிகழ்வுகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்று வருகின்றன. முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது உரை நிகழ்த்தி உற்சாகப்படுத்துகிறார்கள்.
10 நாட்கள் விழா: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, மொத்தம் 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. டூவீலர், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் களமாக மாறிய திருவிழா: பெங்களூரில் வாழும் தமிழர்களுக்கு இது ஒரு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. புத்தகங்கள் வாங்குவதோடு, தங்களது குழந்தைகளுக்கும் தமிழ் கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் இது அளித்துள்ளது.
தமிழ் கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சி: இந்த புத்தகத் திருவிழா, தமிழ் கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய படி எனலாம். தமிழ் இலக்கியம், கலை, கலாசாரம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இது பெரிதும் உதவும். புத்தக ஆர்வலர்கள், குடும்பத்தினர் என அனைவரும் இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்து பயன்பெறலாம்.

இடம்: இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ், குயின்ஸ் சாலை, பெங்களூர். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. நாட்கள்: 10 நாட்கள்.












Click it and Unblock the Notifications