Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோடிகள் நெருக்கமாக இருக்க தடை.. ஆப்கனில் இல்லை.. பெங்களூர் கப்பன் பார்க்கில் தான்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் பசுமையான மரங்கள், செடிகளுக்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள கப்பன் பார்க்கில்(பூங்கா) ஜோடிகள் நெருக்கமாக இருக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காதலர்கள் ஷாக்காகி உள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகளை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்ன? என்பதும் தற்போது வெளியாகி உள்ளது.

பெங்களூரின் மையப்பகுதியில் விதானசவுதாவின் அருகே கப்பன் பார்க் அமைந்துள்ளது. சுமார் 100க்கும் அதிகமான ஏக்கரில் பரந்துவிரிந்து கிடக்கும் இந்த பூங்கா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கு தளமாக உள்ளது.

Bangalorers Cubbon park restrictes lovers cannot get close

நல்ல உயர்ந்த மரங்களுக்கு நடுவே செல்லும் சிறுசிறு பாதைகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஏராளமானவர்கள் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். எப்போதும் ஹாரன் சத்தங்களுக்கு இடையே பெங்களூர் நகரில் வாழும் மக்கள் இந்த பூங்காவில் பறவைகளின் சத்தங்களை கேட்டு இயற்கை சூழலோடு ஒன்றி சில மணிநேரம் பயணிக்கவும் முடியும்.

மேலும் தலைவர்களை நினைவுப்படுத்தும் வகையில் பல சிலைகளும், குழந்தைகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் எப்போதும் இந்த கப்பன் பூங்காவில் மக்கள் நடமாட்டம் இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏராளமானவர்கள் குடும்பத்தோடு வந்து கப்பன் பூங்காவில் பொழுதை கழிப்பது உண்டு.

Bangalorers Cubbon park restrictes lovers cannot get close

இதுதவிர தினந்தோறும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து பேசி கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் அவர்கள் எல்லை மீறி நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கும். இது பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்கிறது. இதனை தடுக்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தான் கப்பன் பூங்காவை பராமரித்து வரும் தோட்டக்கலைத்துறை பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்துள்ளது.

Bangalorers Cubbon park restrictes lovers cannot get close

அதன்படி காதலர்கள் எல்லைமீறி பொதுவெளியில் நெருக்கமாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு கொண்டு செல்லவும், போட்டோ, வீடியோ எடுக்கவும், மரங்களில் ஏறி விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காதல் ஜோடிகள் ஷாக்காகி உள்ளனர்.

இதுதொடர்பாக தோட்டக்கலை மற்றும் பட்டு வளர்ப்பு துறையின் முதன்மை செயலாளர் ராஜேந்திர கட்டாரியா கூறுகையில், ‛‛குடும்பத்துடன் கப்பன் பூங்கா செல்லும் மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. ஜோடியாக வருபவர்கள் பொதுவெளியில் தவறாக நடந்து கொள்வதாகவும், புதர்களுக்கும் நடுவே செல்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதனால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது கப்பன் பூங்காவில் காவலாளிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கையில் மைக்குகள், ஸ்பீக்கர் வைத்து விதிகளை மீறுவோரை எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+