குட் நியூஸ்.. விக்ரம் லேண்டர் உடையவில்லை.. சாய்ந்த நிலையில் பத்திரமாக உள்ளது
Recommended Video
பெங்களூர்: விக்ரம் லேண்டர் பத்திரமாக சாய்ந்த நிலையில் இருப்பதாக, பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், விஞ்ஞானிகள் உடனான தொடர்பை கடைசி நேரத்தில் இழந்து விட்டது.
இந்த நிலையில் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய ஆர்பிட்டர் லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படமாக எடுத்து இஸ்ரோவுக்கு, நேற்று அனுப்பி வைத்தது.

உற்சாகம்
இந்த தகவல் கிடைத்ததும், மக்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதேநேரம், விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் இழந்தது இழந்ததுதான். இதுவரை திரும்பக் கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்திதான். இந்த நிலையில் மற்றொரு தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

உடையவில்லை
இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாக கூறி வெளியிட்டுள்ள அந்த தகவலில், விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங், ஆகவில்லை என்ற போதிலும், ஹார்ட்லேண்ட் ஆகி நிலவில் விழுந்துள்ளது. அதேநேரம் புகைப்படத்தில் இருப்பதை பார்க்கும்போது, அது இரண்டு மூன்று துண்டுகளாக உடையவில்லை. அனுப்பியபோது, எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. சாய்வான நிலையில் இருக்கிறது, அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்கள் எனக் கூறுகிறது அந்த செய்தி.

முயற்சிகள்
லேண்டரிலிருந்து மீண்டும் தகவல் தொடர்பை பெறமுடியுமா என்பதற்கான அனைத்து வகை, முயற்சிகளையும் செய்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவுக்கு இந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி மேலும் தெரிவிக்கிறது.

14 நாட்களுக்குள் சிக்னல் கிடைக்குமா?
லேண்டர் மற்றும் அதற்குள் இருக்கக்கூடிய ரோவர், ஆகியவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும். 14 நாட்களுக்குள் அதிலிருந்து தகவல்தொடர்பு கிடைக்கா விட்டால், அதன் பிறகு லேண்டர் பலனற்றுப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலி சமூக வலைத்தளங்கள் பக்கங்கள் உலவுவதாக இஸ்ரோ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவன் எந்த ஒரு சமூக வலைத்தள பக்கத்திலும், செயல்படவில்லை என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications