ராகுல் காந்தி பதவி நீக்கம்.. காரணமாக இருந்த கர்நாடக "கோலார்" பேச்சு.. அங்கே பாஜக படுதோல்வி!
பெங்களூர்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனிடையே ராகுல் காந்தி பதவிநீக்கத்திற்குக் காரணமாக இருந்த கோலாரில் யாருக்கு வெற்றி என்பதை பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமை எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஆட்சியை அமைத்தது.
இருப்பினும், அந்தத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, நாடு முழுக்க சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார். அவரது தலைமையில் தான் தேர்தலைக் காங்கிரஸ் சந்தித்தது.

அப்போது 2019இல் கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பிரசாரம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொல்லி, சர்ச்சை கருத்து ஒன்றையும் தெரிவித்தார். அது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது இந்தப் பேச்சு குறித்து குஜராத் பாஜக எம்எல்ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
சூரத் நீதிமன்றத்தில் நடந்த இந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறை என்பதால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்தார்.. இதைக் கண்டித்து காங்கிரஸ் நாடு முழுக்க போராட்டம் நடத்தியது. மேலும், காங்கிரஸ் சார்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
இருப்பினும், மேல்முறையீட்டில் இதுவரை அவரது தண்டனையை நிறுத்தி வைக்க எந்தவொரு நீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. இதனால் அவர் எம்பி பதவியை இழந்துள்ளார். அதேபோல ராகுல் காந்தி வசிக்கும் அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என்று கடந்த மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 துக்ளக் லேன் பங்களாவில் இருந்து ராகுல் காந்தி காலி செய்தார். இப்போது அவர் தனது தாயாருடனேயே வசித்து வருகிறார்.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உலகளவில் சில சர்வதேச நாடுகளின் பிரமுகர்களும் கூட இது குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். இது அத்தனையும் கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பேசிய பேச்சு தான் காரணமாக இருந்தது. இன்று கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அந்த கோலார் தொகுதியில் யாருக்கு வெற்றி என்பதைப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தபால் வாக்குகளை எண்ணும் போது பாஜக முன்னிலையில் இருப்பது போல இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
இப்போது கர்நாடகாவில் சுமார் 125-135 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 50- 60 தொகுதிகளிலும், மஜத 20-30 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் கடும் போட்டி இருக்கும் அல்லது தொங்கு சட்டசபை அமையும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவற்றை பொய்யாக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸின் இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த வெற்றிக்குப் பல தலைவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சரி விஷயத்திற்கு வருவோம். கர்நாடகாவின் கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோதூர் மஞ்சுநாதா 75,000 வாக்குகள் பெற்று மிகப் பெரியளவில் முன்னிலை பெற்றுள்ளார். அதேநேரம் பாஜகவின் ஆர்.பார்த்துரு பிரகாஷ் சுமார் 40,000 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.
அதாவது ராகுல் காந்தி பதவிநீக்கத்திற்குக் காரணமாக இருந்த கோலார் தொகுதியில் காங்கிரஸ் இப்போது பெரியளவில் வென்றுள்ளது. பாஜக மிகப் பெரிய தோல்வியடைந்துள்ளது.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications