Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரே அலறிடுச்சு.. மனைவியின் ஓவர் ஆபாசம்.. அந்த டிரஸ்ஸில் வந்து நின்றதுமே அரண்ட கணவர்.. அதுக்கு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அங்கங்கள் தெரியும்படி, அரைகுறையாக டிரஸ் அணிந்து கொண்டாராம் புது மனைவி.. அதுக்குன்னு இப்படியா? அப்படியே ஆடிப்போயி கிடக்குது கர்நாடக மாநிலம்.

பெங்களூரு ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகாவில் உள்ளது ராம்புரா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ஜீவன்.. 25 வயதாகிறது.. அரிசிகேரேவில் செயல்பட்டுவரும், ரெடிமேட் கார்மென்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்..

Do you know Who is this Jothi and why did Bangalore police arrest young man in half dressed issue

திருமணம்: இதே கார்மென்ட்ஸில் வேலை பார்த்து வந்தவர் ஜோதி.. இந்த பெண்ணுக்கு 22 வயதாகிறது.. ஜீவனும், ஜோதியும் காதலிக்க துவங்கினார்கள்.. ஒருகட்டத்தில் திருமணமும் செய்து கொள்ள விரும்பி, தங்கள் பெற்றோரிடம் பேசினார்கள்.. சம்மதத்தையும் பெற்றுவிட்டார்கள்..

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பெரியவர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது.. இந்நிலையில், ஜோதி மார்டன் டிரஸ் அணிந்து வந்ததாக தெரிகிறது.. மார்டனாக அரைகுறை ஆடை அணிவது, ஜோதியின் மாமியாருக்கு பிடிக்கவில்லை.. அதனால், மருமகள் இப்படியெல்லாம் டிரஸ் அணிந்து கொள்கிறாரே என்று ஜீவனிடம் புகார் சொல்லி உள்ளார்கள்..

ஆத்திரம்: பெற்றோர் புகார் கூறியதால், ஆத்திரமடைந்த ஜீவன், இனிமேல் உடல் பாகங்கள் தெரியும்படி, அரைகுறையாக டிரஸ் போடாதே என்று ஜோதியை கண்டித்துள்ளார். ஆனால், ஜோதியோ, தொடர்ந்து மார்டர்ன் டிரஸ் அணிந்துள்ளார்.. பலமுறை சொல்லியும், அரைகுறையாகவே ஆடை அணிந்ததால், தம்பதிக்கு நடுவே தகராறு வெடித்தது.

நேற்று முன்தினம் சாயங்காலம், கடைக்கு செல்வதற்காக ஜோதி கிளம்பி உள்ளார்.. அப்போதும் அரைகுறை உடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.. இதை பார்த்ததுமே கொந்ளித்த ஜீவன், மீண்டும் ஜோதியை சத்தம் போட்டுள்ளார்.. அப்போதும், அந்த டிரஸ்ஸை ஜோதி மாற்றிக்கொள்ளவில்லை. அதனால், ஜோதியை தன்னுடைய பைக்கிலேயே கூட்டிச்சென்று விடுவதாக சொல்லி, அழைத்து சென்றுள்ளார்.

பரிதாப ஜோதி: ஆனால், கடைத்தெரு பக்கம் போகாமல், காட்டுப்பக்கம் பைக்கை திருப்பியிருக்கிறார் ஜீவன். அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டது.. அந்த வனப்பகுதியிலேயே ஜோதியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.. மேலும், கையோடு கொண்டு சென்றிருந்த கத்தியை எடுத்து, ஜோதியின் கழுத்தை அறுத்துவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில், அங்கேயே சரிந்து பிணமானார் ஜோதி.

ஜோதியின் சடலத்தை பார்த்ததுமே, ஜீவன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.. பின்னர் இது தொடர்பான தகவல், அரிசிகெரே போலீசுக்கு சென்றதையடுத்து, ஜோதியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பரபரப்பு: இதுகுறித்த விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், அரைகுறையாக டிரஸ் அணிந்ததால், அந்த கோபத்தில் கழுத்தை அறுத்து, கணவனே கொன்றுவிட்டது தெரியவந்தது.. ஆனால், ஜீவனை காணவில்லை.. மாயமான அவரை தேடும் பணி நடக்கிறது.. கல்யாணமாகி வெறும் 6 மாசத்திலேயே மனைவியை கழுத்து அறுத்து கொன்ற சம்பவம், கர்நாடகவை கதிகலங்க வைத்துவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+