பெங்களூரில் இரவு 10 டூ 5 மணிவரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது.. தீயாய் பரவும் மெசேஜ்.. நிஜம் என்ன?
பெங்களூர்: இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிக்குள் கொரோனா வைரஸை ஒழிக்கக்கக்கூடிய மருந்தை பெங்களூர் முழுக்க தெளிக்க போகிறோம் என்று மாநகராட்சி சார்பில் அறிவித்தது போல பரவிய வாட்ஸ்அப் செய்தி வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. இங்கு தலைநகர் பெங்களூரில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 14 பேர் இந்த மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் வாட்ஸ்அப் வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்டது போன்ற தகவல்கள் இவ்வாறு கூறுகிறது:

மாலை வணக்கம்! இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாருமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து ஸ்பிரே செய்யப்பட உள்ளது. உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு இந்த தகவலை பகிருங்கள். இவ்வாறு அந்த மெசேஜ் சொல்கிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த தகவலில் உண்மை இல்லை. இதுவரை வைரஸுக்கு எதிரான எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெங்களூர் மாநகராட்சியில் அவ்வாறு எந்த ஒரு தெளிப்பானும் பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications