ஆணவக்கொலை.. மதம்விட்டு மதம் காதல் செய்த தலித் வாலிபர் படுகொலை.. காதலியின் தம்பி வெறிச்செயல்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் வாடி டவுன் அருகே மதம்விட்டு மதம் காதல் செய்த தலித் வாலிபரை அவரது காதலியின் தம்பி உள்பட 2 பேர் ஆயுதங்களால் தாக்கி கத்தியால் குத்திக்கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் வாடி டவுனில் உள்ள பீமா நகர் லே-அவுட்டில் வசித்து வந்தவர் விஜய் கம்பாளே(வயது 25). தலித் வகுப்பை சேர்ந்த இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விஜய் கம்பாளே இந்துவாக உள்ள நிலையில் அந்த பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் ஆவார். இதற்கிடையே இவர்கள் 2 பேரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் எதிர்ப்பு
இதனை அந்த பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்தனர். இருவரும் வெவ்வேறு மதம். இது குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. இதனால் விஜய் கம்பாளேவுடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் அட்வைஸ் செய்தனர். அதேநேரத்தில் இளம்பெண்ணின் சகோதரர் உள்பட சிலர் விஜய் கம்பாளேவின் வீட்டுக்கு சென்று, ‛‛காதல் என சுற்றக்கூடாது. மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி கழுத்தை வெட்டி கொலை செய்துவிடுவோம்'' என மிரட்டியுள்ளனர்.

குத்திக்கொலை
இருப்பினும் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இளம்பெண்ணின் சகோதரருக்கு தெரியவந்தது. இதனால் அவர் விஜய் கம்பாளே மீது கடும் கோபமடைந்தார். இந்நிலையில் வாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற விஜய் கம்பாளேவை மர்மநபர்கள் ஆயுதம், கல், கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும், கத்தியால் குத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் விஜய் கம்பாளே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜய் கம்பாளேவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விஜய் கம்பாளேவின் தாய் போலீசில் புகார் செய்தார். மேலும் இளம்பெண்ணின் சகோதரர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

2 பேர் கைது
இந்நிலையில் தான் கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி எஸ்பி இஷா பண்ட் கூறுகையில், ‛‛விஜய் கம்பாளேவை கொலை செய்ததாக சகாபுதீன் (19), நவாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் சகாபுதீன் என்பவர் விஜய் கம்பாளே காதல் செய் இளம்பெண்ணின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications