யார் அடுத்த முதல்வராக வேண்டும்? சர்வேயில் கர்நாடக மக்களின் ஆச்சரிய முடிவு.. இது லிஸ்ட்லயே இல்லையே!
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பல்வேறு அமைப்பினர் சர்வேக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பாப்புலர் போல்ஸ் எனும் அமைப்ப சார்பில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்விக்கு மக்கள் ஆச்சரியமான பதிலை அளித்துள்ளனர். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கிறார். கடந்த 2018ல் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடகா சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த முறை அங்கு நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கி நிலையில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது.

பாப்புலர் போல்ஸ் சர்வே
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியைமக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது ‛பாப்புலர் போல்ஸ்' புதிய சர்வே முடிவு வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பாப்புலர் போல்ஸ்(Popular Polls) எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது.

1.12 லட்சம் பேரிடம் சர்வே
இந்த கருத்து கணிப்பானது 2022 நவம்பர் மாதம் 10ம் தேதி முதல் 2023 ஜனவரி 30ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடந்தது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் வசித்து வரும் 1 லட்சத்து 12 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாப்புலர் போல்ஸ் சர்வே வெளியாகி உள்ளன.

அடுத்த முதல்வர் யார்?
அதன்படி கர்நாடகாவில் அடுத்த முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மக்கள் பதிலளித்தனர். இதில் அதிகமான மக்கள் அளித்த பதில் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோரை முதல்வராக மக்கள் விரும்புகின்றனர். பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, பாஜக மூத்த தலைவர் பசவனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோரையும், ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் குமாரசாமியையும் முதல்வராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

குமாரசாமிக்கு அதிக ஆதரவு
இந்த சர்வேயில் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் அதிகமானவர்கள் முன்னாள் முதல்வரான ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தம் 24 சதவீதம் பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பிற இடங்களை காட்டிலும் மைசூர் கர்நாடகா பகுதியில் குமாரசாமிக்கான ஆதரவு என்பது அதிகமாக உள்ளது.

சித்தராமையாவுக்கு 2ம் இடம்
இதற்கு அடுத்த படியாக 2வது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பெயரை மக்கள் தெரிவித்துள்ளார். இவரை 18 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் இவருக்கான ஆதரவு உள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை 15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தலித் சமுதாயத்தை சேர்ந்த பலரும் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை தெரிவித்துள்ளனர். மாறாக காங்கிரஸ் மாநில தலைவர் டிகேசிவக்குமாரின் பெயரை 4 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு எவ்வளவு?
இது ஒருபுறம் இருக்க பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் முதல்வராக வேண்டும் என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர பிற தலைவர்கள் முதல் அமைச்சராக வர வேண்டும் என்று 29 சதவீதம் பேர் கலவையாக தெரிவித்துள்ளனர்.

தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு
முன்னதாக பாப்புலர் போல்ஸ் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 80 முதல் 84 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 82 முதல் 87 இடங்களிலும், ஜேடிஎஸ் 42 முதல் 45 இடங்களிலும், மற்றவர்கள் 4 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் கர்நாடகாவில் இந்த முறை தொங்கு சட்டசபை அமையும் என அந்த கருத்து கணிப்பு உணர்த்தியது.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications