"கூட்டாட்சி" தத்துவத்தை மதிக்காத மத்திய பாஜக அரசு- சுதந்திர தின விழாவில் சித்தராமையா சரமாரி தாக்கு!
பெங்களூர்: நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதிப்பதே இல்லை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடுமையாக தாக்கி உள்ளார். மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் நிதி பெறுவதற்கு கூட நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலைமை இருப்பதாக கர்நாடகாவில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா இன்று தேசியக் கொடியேற்றினார். அப்போது முதல்வர் சித்தராமையா பேசியதாவது: எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் கர்நாடகா அரசு செயல்படுத்தி வரும் 5 உத்தரவாத திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சமூக நீதி, பொருளாதார சமத்துவத்தின் மூலமாக தேசத்தின் வளர்ச்சிக்கான கர்நாடகா மாடல் அரசு தொடர்ந்து செயல்படும்.

இந்தியா என்பது உன்னதமான கலாசாரத்தைக் கொண்டது; பல்லாயிரம் மொழிகள் பேசக் கூடிய நிலம்; பல நூறு மதங்களைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமையை கடைபிடிக்கக் கூடியது. ஆகையால் யாரும் யாருக்கும் நல்லிணக்கம் குறித்து எல்லாம் பாடம் எடுக்க தேவையும் இல்லை. இதைத்தான் நாம் பல்லாண்டுகாலமாகவும் கடைபிடித்து வருகிறோம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர், பெண்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக நாம் பாடுபடுகிறோம். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்விதான் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறோம்.
அரசியல் சாசனம்தான் நமக்கான வழிகாட்டி. இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள்தான். சுதந்திர தினம் என்பது கொண்டாட்டத்துக்குரியது மட்டுமல்ல; நமது கடமைகளையும் நினைவூட்டக் கூடியது.

மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவம் என்ற கோட்பாட்டில் இருந்து விலகிச் செல்கிறது; கூட்டாட்சித் தத்துவத்தையே மத்திய அரசு மதிக்கவும் இல்லை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாரபட்சம் காட்டுகிறது. மாநிலங்களின் வளர்ச்சியால்தான் ஒட்டுமொத்த தேசமும் வளர்ச்சியடைய முடியும். ஆகையால் மாநிலங்களின் வளர்ச்சிக்கான உரிய நிதியை பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதற்காக மாநில அரசுகள் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமைதான் இருக்கிறது.
ஜனநாயகக் கட்டமைப்பில் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அரசியல் சாசனத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications