எவ்வித அறிவிப்புமின்றி.... திஷா ரவியை கைது செய்த டெல்லி போலீஸ்... காங். எம்பி குற்றச்சாட்டு
பெங்களூரு: கர்நாடக காவல்துறை மற்றும் மாநில அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாமல் திஷா ரவியை பெங்களூருவில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி நசீர் உசேன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி. இவர்தான் கிரேட்டா துன்பர்க்கின்' ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' என்கிற அமைப்பை இந்தியாவில் நிறுவியவர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கிரெட்டா துன்பெர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். அத்துடன் அதில் டூல்கிட் ஒன்றையும் இணைந்திருந்தார். அந்த டூல்கிட்டை வடிவமைத்தது காலிஸ்தான் பிரிவினைவாதிகளில் ஒருவர் என்று டெல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், திஷா ரவி இந்த 'டூல்கிட்டை' உருவாக்கியதில் முக்கிய சதியில் ஈடுபட்டவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவே சமீபத்தில் திஷா ரவியை டெல்லி போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி இப்படி கைது செய்யப்பட்டதற்கு நாட்டிலுள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி நசீர் உசேன் கூறுகையில், "திஷா ரவியின் கைது கர்நாடக காவல்துறை மற்றும் மாநில அரசுக்கு தெரிவிக்காமல் செய்யப்பட்டது.
விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களை எப்படி பஞ்சாபில் கைது செய்யப்படுகிறார்களோ, அதேபோல தான் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாகவே மத்திய அரசு சுமார் 140 பேரை இது போல கைது செய்துள்ளது.
ஆனால், அவர்களில் வெறும் 1% குறைவானவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்" என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications