டிகே சிவக்குமாருக்கு சிக்கல்? சிபிஐ பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தனக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் கணக்கில் வராத‌ ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்ற‌ப்பட்டது.

Karnataka High Court dismiss D K Shivakumars plea to quash CBIs disproportionate assets case

அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட‌து. தனக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார்மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.

இந்த நிலையில், தனக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிகே சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் டிகே சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்யவும் சிபிஐக்கு நீதிமன்றம்விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+