மக்கள் எங்கள் பக்கம்..வெற்றியை பரிசளித்த அனைவருக்கும் நன்றி..காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
பெங்களூரு: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறிய மல்லிகார்ஜூன கார்கே மக்கள் எங்கள் பக்கம் இருந்தனர் என்று உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், 129 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைபெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதேவேளை, 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி வருகின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநிலத்தில் உள்ள அரசுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலில் ஆள் அம்பு படை என அனைத்து வகையிலும் தேர்தல் வேலை செய்தனர். அவர்களின் வெறுப்பு அரசியல் இங்கே வேலை செய்யவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஜனநாயக ரீதியாக மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தோம். மக்களின் மனம் ஒன்றுபோல இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இந்த வெற்றியை பரிசளித்துள்ளனர். எங்கள் கட்சியின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications