மக்கள் எங்கள் பக்கம்..வெற்றியை பரிசளித்த அனைவருக்கும் நன்றி..காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
பெங்களூரு: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறிய மல்லிகார்ஜூன கார்கே மக்கள் எங்கள் பக்கம் இருந்தனர் என்று உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், 129 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைபெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதேவேளை, 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி வருகின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநிலத்தில் உள்ள அரசுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலில் ஆள் அம்பு படை என அனைத்து வகையிலும் தேர்தல் வேலை செய்தனர். அவர்களின் வெறுப்பு அரசியல் இங்கே வேலை செய்யவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஜனநாயக ரீதியாக மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தோம். மக்களின் மனம் ஒன்றுபோல இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இந்த வெற்றியை பரிசளித்துள்ளனர். எங்கள் கட்சியின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications