கடைசியாக போனில் 3 பேருடன் பேசிய சித்தார்த்தா.. யாருடன் பேசினார்?.. போலீஸ் விசாரணை
பெங்களூர்: நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் கடைசியாக யாருக்கோ போன் செய்த சித்தார்த்தா யாருடன் பேசினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா. இவர் நேற்று காரில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நேத்ராவதி ஆற்று பாலத்தில் காரை நிறுத்த கூறினார். பின்னர் காரை விட்டு இறங்கி அங்கு பாலத்தில் சிறிது நேரம் நடந்து செல்வதாக கூறிய சித்தார்த்தா நீண்ட நேரமாகியும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த டிரைவர், ஆற்றுப் பாலத்துக்கு சென்று தேடியுள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். அவர்களது தகவலின் பேரில் தக்ஷின கன்னட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் யாருடன் பேசினார் என்பது குறித்து செல்போன் எண்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் அவர் நேத்ராவதி ஆற்றின் பாலத்தின் மேலிருந்து யாருடனோ பேசியதாக செல்போன் சிக்னல் காட்டுகிறது என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அவரது போன் கால்களை ஆய்வு செய்ததில் அவர் மூன்று பேருடன் பேசியது தெரியவந்தது. டிரைவர், சிக்மக்ளூர் காபி டே கிளையின் மேனேஜர், பெங்களூர் கிளையின் மேனேஜர் ஆகியோருடன் போனில் பேசியுள்ளார். அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications