Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானத்தை அலற விட்ட "தெருநாய்.." புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய பெங்களூர் விமானம்.. நடந்தது இதுதான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இருந்து கோவாவிற்கு சென்ற விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையின் குறுக்கே நாய் புகுந்ததால் தரையிறங்காமல் மீண்டும் பெங்களூருக்கே திரும்பி சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைக்காது. இதனால், விமானங்கள் வானத்திலேயே வட்டமடித்து விட்டு மீண்டும் அனுமதி கிடைத்த பிறகு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும். வானிலை மோசமாக இருந்தாலும் இதே நிலைதான்.. சில நேரங்கள் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானங்கள் திரும்பி செல்வதையும் அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம்.

 Stray dog enters runway at Goa airport, Flight returns to Bangalore

இன்னும் சில சமயத்தில் விமான பயணிகள் யாருக்கேனும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ... பயணிகள் நடுவானில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டாலோ... அவசரமாக அருகில் உள்ள விமான நிலையங்களில் விமானம் தரையிறக்கப்படும். பயணிகளும் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், கோவாவில் தெருநாய் ஒன்றால் விமானம் தரையிறங்காமல் மீண்டும் புறப்பட்ட இடமான பெங்களூருக்கே திரும்பி சென்றுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

குறுக்கே வந்த தெருநாய்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவாவிற்கு விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான UK 881 என்ற விமானம் சென்று கொண்டு இருந்தது. நேற்று மாலை இந்த விமானம் கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. அப்போது விமானத்தின் ஓடுபாதையில் தெரு நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால், விமானம் தரையிறங்குவதை சற்று நிறுத்தி வைக்குமாறு கூறப்பட்டது.

விமானம் தரையிறங்குவதை சற்று நிறுத்தி வைக்குமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விஸ்தாரா விமானத்தின் விமானியை கேட்டுக்கொண்டனர். ஆனால், விமானி மீண்டும் பெங்களூருக்கே திரும்பி செல்ல முடிவு செய்து திரும்பி சென்றுள்ளார். பெங்களூரின் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து நேற்று நண்பகல் 12.55 மணிக்கு புறப்பட்ட விஸ்தாரா விமானம், மீண்டும் பிற்பகல் 3.05 மணிக்கு பெங்களூருக்கே திரும்பி வந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தான் முதல்முறை: பின்னர் மீண்டும் பெங்களூரில் இருந்து 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவாவிற்கு 6.15 மணிக்கு சென்று சேர்ந்துள்ளது. இது தொடர்பாக விஸ்தாரா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பெங்களூரில் இருந்து கோவாவிற்கு புறப்பட்ட UK881 என்ற விமானம் கோவா விமான நிலைய ஓடுதளத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் பின்னர் மாலை 6.15 மணிக்கு மீண்டும் கோவா சென்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவா விமான நிலைய இயக்குனர் எஸ்.வி.டி தன்மஜ்யா ராவ் இது தொடர்பாக கூறுகையில், "விமான நிலைய ஓடுதளத்திற்குள் தெருநாய்கள் ஓடி வரும் நிகழ்வுகள் சில சமயம் நடந்து இருக்கிறது. உடனடியாக அங்கு இருக்கும் ஊழியர்கள் நாய்களை விரட்டி பாதைக்கு இடையூறு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், இதுபோன்ற சம்பவம் நடப்பது எனது பணிக்காலத்தில் இதுவே முதல் முறை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+