Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்கல்லாம் நிஜமாவே டீச்சர்தானா.. "டிரஸ்சில் லைட்டா.." அதுக்கு வெந்நீரை ஊற்றுவீங்களா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆடையில் மலம் கழித்த 7 வயது சிறுவன் மீது ஆசிரியர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கூடம் தான் ஒரு குழந்தையின் இரண்டாவது வீடு எனக் கூறுவார்கள். ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்கள் அப்படிதான் இருந்தன. தன்னிடம் பயிலும் குழந்தையை தனது பிள்ளைகளாகவே கருதிய ஆசிரியர்கள் ஏராளம்.

சரியாக படிக்காத மாணவர்களை மாலை நேரங்களில் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்பும் ஆசிரியர்களும் இருக்கவே செய்தார்கள்.

ஆனால் காலம் மாற மாற, ஆசிரியர்களின் மனோபாவங்களும் மாறிவிட்டன. ஆசிரிய பணி அறப்பணி என்பதை மறந்து ஏதோ சம்பளத்துக்காக வேலைக்கு வரும் ஆசிரியர்கள்தான் இன்று நிறைய பேர் இருக்கின்றனர்.

 இரக்கமற்ற ஆசிரியர்கள்

இரக்கமற்ற ஆசிரியர்கள்

இதுபோன்ற ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களை தொல்லைகளாகவே பார்க்கின்றனர். அவர்களிடம் இரக்கமே இல்லாமல் மோசமாக நடந்து கொள்கின்றனர். அதுவும், ஆரம்ப வகுப்புகளில் இதுபோன்ற மனோபாவம் கொண்ட ஆசிரியர்கள் இருந்தால், மாணவர்களின் நிலை பரிதாபம்தான். சிறு பிள்ளைகள் என்பதால் பள்ளியில் நடந்ததை சரியாக வீட்டில் சொல்ல தெரியாமலும், அப்படியொரு கொடூர சம்பவம்தான் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

 மலம் கழிக்க அனுமதிக்கவில்லை

மலம் கழிக்க அனுமதிக்கவில்லை

கர்நாடகா மாநிலம் ராய்சூர் மாவட்டத்தில் உள்ள சன்ட்டேகல்லூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் ஒருவன், நேற்று தனது வகுப்பு ஆசிரியர் ஹுலிகெயப்பாவிடம் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த ஆசிரியர், வகுப்பு முடிந்த பிறகு செல் எனக் கூறியுள்ளார். ஆனால், இயற்கை உபாதையை அடக்க முடியாத சிறுவன், ஆடையிலேயே மலம் கழித்துவிட்டான்.

 கொதிக்கும் நீரை..

கொதிக்கும் நீரை..

இதனை பார்த்து கோபமடைந்த ஆசிரியர், கொதிக்கும் நீரை எடுத்து வந்து மாணவன் மீது ஊற்றினார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறித் துடித்திருக்கிறான். அவனது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு மற்ற வகுப்பு ஆசிரியைகளும், மாணவர்களும் வந்து பார்த்துள்ளனர்.

இதையடுத்து, சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் அவர்கள் கொண்டு சேர்த்தனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இதுவரை நடவடிக்கை இல்லை

இதுவரை நடவடிக்கை இல்லை

இந்நிலையில், அந்த கொடூர ஆசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பள்ளியில் நடந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டோம். ஆனால் மாணவனின் பெற்றோர் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மேலும், இது பள்ளிக்கல்வித் துறைக்கு கீழ் வருவதால் அந்த துறை சார்பிலாவது எங்களுக்கு புகார் தர வேண்டும். அதுவும் வரவில்லை" என்றார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரை புகார் கொடுக்கக் கூடாது என உள்ளூர் கட்சிக்காரர்கள் சிலர் மிரட்டுவதாக தகவலறிந்த உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

 சில தினங்களுக்கு முன்பு

சில தினங்களுக்கு முன்பு

கர்நாடகாவின் தும்கூரு நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சில தினங்களுக்கு முன்பு 3 வயது பட்டியலின சிறுவன், ஆடையில் மலம் கழித்ததற்காக அவனது பிறப்புறுப்பில் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியை ராஷ்மி (28) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூர சம்பவம் நடந்த ஒரு சில நாட்களிலேயே மேலும் அதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+