ரசாயனம் மற்றும் உரங்கள் துறையை மீண்டும் நிர்வகிக்க உள்ள மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
Recommended Video
பெங்களூரு: மோடி அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராகியுள்ள சதானந்த கவுடாவிற்கு, கடைசியாக அவர் பொறுப்பு வகித்த ரசாயனம் மற்றும் உரங்கள் துறையே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனையடுத்து பிரதமராக நேற்று மோடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து மொத்தம் 57 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களின் துறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய பாஜக தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சதானந்த கவுடாவிற்கு, ரசாயனம் மற்றும் உரங்கள் துறையே மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.
சதானந்த கவுடா 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் தற்போதைய தட்சிண கன்னடா எனப்படும் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய சதானந்த கவுடா சட்டப்படிப்பை முடித்த பின்னர், 1976-ம் ஆண்டு சட்ட பயிற்சியை துவக்கினார். பின்னர், அவர் சுல்லியா மற்றும் புட்டூர் இரண்டிலும் பயிற்சி சட்டப்பயிற்சியை மேற்கொண்டார். டேட்டி என்பவரை மணந்த சதானந்த கவுடாவிற்கு 2 மகன்கள் உள்ளனர்.
கவுடா சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை மக்களின் நலன் மீது அக்கறை கொண்டதால் அவர்களின் நலன்களுக்காக அரசியலில் காலடி வைக்க முடிவு செய்தார். மேலும் அவரது கல்லூரி நாட்களிலிருந்து அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. கல்லூரி மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் சதானந்த கவுடா இருந்துள்ளார்
நேரடி அரசியலில் ஈடுபட விரும்பிய அவர் தனது வழக்கறிஞர் வேலையில் இருந்து விலகி 1970-களின் பிற்பகுதியில் ஜன சங்கம் அமைப்பில் சேர்ந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவர் கட்சியின் சுலியா சட்டமன்ற பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அவர் பாஜக உறுப்பினராக ஆனார். அதன் பின்னர் தக்ஷினா கன்னட பா.ஜ.க இளைஞர் மோர்ச்சா ஜனாதிபதியாகவும், பின்னர் தக்ஷினா கன்னட பாஜக துணைத் தலைவராகவும் ஆனார். 1994ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் கவுடா பெற்ற வெற்றி அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது.
பின்னா் கர்நாடகா மாநில சட்டமன்றத்தில் பல பதவிகளை கவுடா ஆக்கிரமித்தார். அவரின் திறமையை அங்கீகரித்த கட்சி தலைமை அவரை தேசிய செயலாளராக நியமித்தது. தொடர்ந்து பல பொறுப்புகளை திறம்பட கையாண்ட சதானந்த கவுடாவை 2006-ம் ஆண்டில் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக பாஜக நியமித்தது.
பின்னர் 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் கர்நாடக முதல்வர் பதவியையும் சதானந்த கவுடா வகித்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று மோடியின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் சதானந்தா கவுடா ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.
மோடி அரசில் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றங்களின் போது சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும், புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராகவும், இறுதியாக ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போதைய மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்களவை உறுப்பினரானார்.
நன்கு திறமையாக செயல்படுபவர், பல்வேறு தளங்களிலும் தனது திறமையை வெளிகாட்டுபவர் என்ற அடிப்படையில் மீண்டும் சதானந்த கவுடாவிற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications