சசிகலா தீவிர அரசியலுக்கு வருவாரா?.. விரைவில் அதிகாரப்பூர்வ வீடியோ ரிலீஸாமே?
சென்னை: சசிகலா விரைவில் வீடியோவில் தோன்ற வாய்ப்பிருப்பதாகவும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் அவரது செயல்களும் பேச்சுகளும் இருந்தன.
இந்த நிலையில் அவர் தேர்தலுக்கு முன்பே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். "நான் அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அரசியல்
ஆனால் சசிகலா தற்போது பதுங்கி சமயம் பார்த்து முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அரசியல் நோக்காளர்கள் தெரிவித்திருந்தனர். அதன் படி தற்போது கடந்த இரு தினங்களாக சசிகலா பேசியதாக இரு ஆடியோக்கள் வெளியாகின. அதில் யாரோ கட்சித் தொண்டரிடம் கவலைப்படாதீர்கள், நான் விரைவில் வருகிறேன்.

சண்டை
கட்சியை சரி செய்துவிடலாம். அவர்கள் சண்டையிடுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது, கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்
என தெரிவித்திருந்தார். இந்த இரு ஆடியோக்களும் அதிமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தின.

சசிகலா கபளீகரம்
எப்போது வேண்டுமானாலும் அதிமுகவை சசிகலா கபளீகரம் செய்ய வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலா இனி தீவிர அரசியலில் இறங்குவார் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான வீடியோ விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

ஆடியோ
மேலும் சசிகலாவின் பேசியதாக வெளியான ஆடியோவில் இருந்தது அவரது குரல்தானா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அது அவரது குரல்தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே இனி சசிகலா முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications