ஜிஎஸ்டி மத்திய அரசுக்கு முதல் மாத வசூல் ரூ. 42ஆயிரம் கோடி
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 42 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியால் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ. 42ஆயிரம் கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் ஆயர்தீர்வையாக ( excise duty)ரூ. 31,782 கோடி வசூலானது. சேவை வரியாக 19,600 கோடி வசூலானது.
நடப்பாண்டு ஜூலை மாதத்தில் முதல்நாள் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை, மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்தது.

ரூ. 42000 கோடி
கடந்த வாரத்தில் இருந்து ஜி.எஸ்.டி. வரி ரிட்டனை தொழிற்சாலைகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதில் இப்போது வரை முதல் மாதத்தில் 42 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த வரி
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி(IGST)வரி மூலம், ரூ. 15 ஆயிரம் கோடியும், புகையிலை உள்ளிட்ட உடல் நலக்கேடு விளைவிக்கும் பொருட்களில் இருந்து ரூ. 5ஆயிரம் கோடியும் வரி வசூலாகியுள்ளது.
Recommended Video


ரிட்டன தாக்கல்
மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி வரியாக ரூ.22 ஆயிரம்கோடி வரியாக வந்துள்ளது. தற்போது வரை 10லட்சம் பேர் வரிசெலுத்துபவர்கள் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். மேலும், 20 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
எங்கள் கணக்குப்படி, 95 சதவீதம்பேர் ரிட்டன் தாக்கல் செய்துவிடுவார்கள் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

50 லட்சம் பேர்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயத்தீர்வையாக ரூ.31 ஆயிரத்து 782 கோடியும், சேவை வரியாக ரூ.19 ஆயிரத்து 600 கோடியும் வசூலானது. இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியோடு, மாநில அரசுகளின் வரியும் சேர்க்கப்படும் பட்சத்தில் வரிவசூல் அதிகரிக்கும். மேலும், 72 லட்சம் வரி செலுத்துபவர்களில் 50 லட்சம் பேர் ஜி.எஸ்.டி.க்கு மாறிவிட்டனர்.

ஜிஎஸ்டிஆர் 3பி படிவம்
15 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர், ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது, ஜூலை மாதத்தில் 60 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபராதம் வசூல்
மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்கள், தொழில்நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமும், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஜூலை மாதம் சுங்க வரி ரூ. 30000 கோடி வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications