உப்பளம், விவசாயிகள், மீனவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கஜா புயல் - 2000 கோடி நஷ்டம்
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் ஆன நிலையிலும் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர் டெல்டா மாவட்ட மக்கள். உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.
தஞ்சாவூர்: நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடி சென்று விட்டது. தென்னை மரங்கள் சாய்ந்ததில் விவசாயிகள் அடியோடு வீழ்ந்து போயுள்ளனர்.
கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்திற்கு மீன்கள் ஏற்றுமதி, உப்பு உற்பத்தி, மாங்காய், சவுக்கு, மல்லிகை, தென்னை என 2000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலின் காரணமாகத் தமிழகத்தில் மல்லிகைப் பூவின் உற்பத்தி வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இதனால் மல்லிகைப் பூவின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

காவிரியின் கடைமடைப் பகுதியான வேதாரண்யத்தில் மீன்பிடித் தொழில், உப்பளம், மட்டுமின்றி மல்லிகைப் பூ சாகுபடியும் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள விளையும் பூக்கள், தஞ்சை, திருவாரூர் எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.
கஜா புயலின் தாண்டாவத்திற்கு சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது மல்லிகை செடிகள். மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் உற்பத்தியாளருக்கும், அந்தத் தொழிலை நம்பி வாழ்ந்துவரும் கூலி விவசாயிகளுக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மல்லிகைப் பூவின் உற்பத்திப் பற்றாக்குறையால் தமிழகத்தில் மல்லிகைப் பூவின் விலை உயரும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உப்பளத் தொழிலில் முன்னணி வகிக்கும் வேதாரண்யம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குப் பெருமளவில் உப்பு அனுப்பப்பட்டு வந்தது. கஜா புயலின் காரணமாக வேதாரண்யம் பலத்த சேதமடைந்திருப்பதால் உப்பளங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. கஜா புயல் பாதிப்பால் இந்தத் தொழிலை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புயலின் காரணமாக சென்ற வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டது போக மீதமிருந்த 1.75 லட்சம் டன் உப்பு புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட இப்பாதிப்புகளைச் சரி செய்வதற்கான முதலீட்டுக்கு போதுமான பொருளாதாரம் உற்பத்தியாளர்களிடம் இல்லை. பிப்ரவரியில் தொடங்கப்பட வேண்டிய உற்பத்தி தாமதமானால் 2019ஆம் ஆண்டுக்கான உப்பு உற்பத்தியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும். கஜா புயல் பாதிப்பால் இந்தத் தொழிலை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications