Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 "ஹவர்ஸ் டியூட்டி" ஆபத்தாச்சே.. பாஜகவே தயங்குதே, திமுகவுக்கு என்னாச்சு? சீறியது யார்ன்னு தெரியுதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவே நடைமுறைப்படுத்த தயங்கும் 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.. அத்துடன், 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்கும் தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.

நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் பேரவையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்தன..

12 hour work bill and aam aadmi party vaseegaran opposes DMKs 12 hour work law

திமுக அரசு: தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக அரசு கடந்த 2020ம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே இந்த திருத்த சட்டம் அமைந்துள்ளதுதாக இக்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், தமிழக ஆம் ஆத்மி கட்சியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்கும் தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்..

தொழிலாளர் உரிமை: அந்த அறிக்கையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது திமுக இத்தனை ஆண்டுக் காலமாகக் கடைபிடித்து வரும் தொழிலாளர் நலன்சார்ந்த கொள்கைளுக்கே எதிராக உள்ளது. மேலும் மே தின என்பதே தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டு மணி நேரம் வேலை என்பதேயாகும். தொழிலாளர்களின் ரத்தத்தில் அவர்களின் போராட்டத்தால் விளைந்த அடையாளம் தான் 8 மணிநேர வேலை. 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் வகையில், 12 மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும்.

இது சர்வாதிகார முதலாளித்துவ வர்க்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, இதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்டம், 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவு 51, 52, 54, 55, 56 மற்றும் 59 ஆகியவற்றின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்கிறது. இதன்மூலம் வேலை நேரத்தைத் தொழிலகங்கள் விரும்புகிறபடி மாற்றி அமைத்துக்கொள்ள இது அதிகாரமளிக்கிறது. இதனால் தற்போதுள்ள 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயரும் ஆபத்து உள்ளதாக தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

வசீகரன் கோரிக்கை: தமிழ்நாட்டில் தான் 1923-ல் சிங்காரவேலரின் முயற்சியால் மே நாள் கொண்டாடப்பட்டது. அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக திமுக அரசு நிறைவேற்றியது ஏன்? தமிழக தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கிற தொழிலாளர் விரோத சட்டமான இந்த திருத்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று வசீகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+