சென்னை மின்சார ரயில் மோதி.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. செல்போன் பேசியபடி சென்றதால் விபரீதம்
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். செல்போன் பேசியபடியே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இன்று கல்லூரி மாணவர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாணவர்கள் மீது ரயில் மோதியது. ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் ரயில் மோதி உயிரிழந்த மாணவர்கள் பெயர் முகமது நஃபூல் மற்றும் சபீர் அகமது என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடந்து சென்ற போது செல்போனில் பேசியபடியே கவனக்குறைவாக சென்றதே காரணம் என சொல்லப்படுகிறது. ரயில் மோதி இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications