300 எலக்ட்ரிக் பஸ்.. சென்னையில் பழைய கட்டணத்திலேயே ஏசி ஜாலி டிரிப்! செம சர்ப்ரைஸ்! எப்போது வருகிறது
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நகரின் பொதுப்போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், முக்கிய போக்குவரத்து மையங்களை ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.. ஆம், இந்த புதிய திட்டத்தின்படி, சென்னையில் டிராபிக் வெகுவாக குறையும்.. அத்துடன் பொதுமக்களுக்கும் பயண நேரம் நிறையவே குறையும்.. அப்படியொரு திட்டத்தைதான் அரசு இப்போது கொண்டுவந்துள்ளது.. இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நம்முடைய சென்னையை பொறுத்தவரை,மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இந்த பஸ்களில் நாள்தோறும் சுமார் 34 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

சென்னை மின்சார பஸ்கள்
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் பஸ்களை பயன்படுத்தினாலும், ரயில் அல்லது மெட்ரோவில் இறங்கிய பிறகு தங்கள் வீடுகளுக்கோ அல்லது ஆபீஸ்களுக்கோ செல்வதற்கான இறுதி கட்ட இணைப்பு சேவை என்பது நீண்டகால குறையாகவே இருந்து வருகிறது..
அதுவும் மெட்ரோ மற்றும் எலக்ட்ரிக் ரயில் நிலையங்களில் இருந்து அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு செல்ல பயணிகள் கூடுதல் நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டிய நிலைமை உள்ளது.. இதுபோன்ற சிரமங்களுக்கு ஒரு முடிவு கட்டும்வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது சூப்பரான முக்கிய முடிவை எடுத்துள்ளது.
300 எலக்ட்ரிக் பஸ்
அதன்படி மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கும் வகையில் 300 புதிய எலக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகம் இப்போது ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்கள் எல்லாமே குளுகுளு ஏசி கொண்டவையாகும்.
இந்த திட்டத்தின் மிக முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது அரசு மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்களை இயக்குவது, அவற்றை பராமரிப்பது, அவற்றுக்கு தேவையான மின்சார வசதி உட்பட மற்ற உள்கட்டமைப்பு பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களே முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
பழைய கட்டணத்திலேயே
இப்படியெல்லாம் செய்வதன் மூலம் நிர்வாக சுமை குறைவதோடு, பயணிகளுக்கான சேவையின் தரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு எலக்ட்ரிக் பஸ்சும் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 4800 கிலோமீட்டர் தூரம் கட்டாயம் இயக்கப்பட வேண்டும் என்ற கண்டிஷனும் விதிக்கப்பட்டுள்ளதாம்.. இது எதற்காகவென்றால், இதன் மூலம் நகரின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இந்த இணைப்பு சேவை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்பதற்காகத்தான்.
ஏசி வசதி ஜாலி டிரிப்
அப்படியென்றால் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுமா? என்ற டவுட் வரலாம்.. அந்த பயமே தேவையில்லை.. காரணம், இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் சேவைக்காக பயணிகளிடமிருந்து எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சாதாரண கட்டண முறையிலேயே இந்த நவீன பஸ் சேவைகளும் வழங்கப்பட உள்ளன..
அரசின் இந்த நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதன் மூலம் பொதுமக்களின் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகனங்களின் பயன்பாடு சென்னையில் பெருமளவு ஊக்குவிக்கப்படும்..
மேலும் இந்த 300 எலக்ட்ரிக் பஸ்களின் வருகை சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, சாமானிய மக்களின் தினசரி பயணத்தை மிகவும் எளிதாகவும் இனிமையாகவும் மாற்றும் என்று நம்பப்படுகிறது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications