மின்சார ரயில்கள் ரத்து! சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள்!
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வரும் 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் போதிய ரயில்கள் இல்லாமல் கிண்டி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் தொடர்ந்து 20 நிமிடங்களாக காத்திருக்கும் நிலை உள்ளது.

சென்னையின் முக்கிய புறநகர் ரயில் சேவைகளில் ஒன்றான கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி காரணமாக 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தப் பணி, பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று (பிப்ரவரி 20) தொடங்கி, ஏப்ரல் 5-ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு இந்த ரயில் சேவை மாற்றங்கள் அமலில் இருக்கும். பொதுவாக, இந்தப் பாதையில் தினசரி 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 2.80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நின்று செல்லும் புறநகர் ரயில்கள், இந்த நாட்களில் 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் ரத்து காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள். பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம், கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, வண்டலூரை அடுத்த மேலகோட்டையூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த மின்சார ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் இருந்து பீச் வரை குறைந்த கட்டணத்தில் இவர்கள் பயணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மின்சார ரயில்கள் ரத்தானதால் குறைந்த அளவிலான சில வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கிண்டி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அங்கும் 20 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தும் ரயில் வராததால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications