மீன் விலை எகிற போகுது! தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று அமலுக்கு வருவதாக அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலம், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தினை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தம் சட்டத்தின் படி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை வங்கக் கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் காலம் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்க இப்படி ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இன்று நள்ளிரவு முதல் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். தமிழகத்தின் குமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையில் தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் மேற்குறிப்பிட்ட 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதுவைக்கும் இந்த தடைக்காலம் பொருந்தும்.
பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் தவிர விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் எதற்காக என்று கேட்டால், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கும் பட்சத்தில், மீன்கள் இனம் அழிந்துவிடும் என்பதனால் இந்த மீன்பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு (15 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் கூறினார். மேலும் கூறுகையில், வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை இந்த மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த மீன்பிடி தடைக்காலத்தின் போது விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 கடல் மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம். இந்த மீன்பிடி தடைக்காலத்தினால் பாதிக்கப்படும் சுமார் 17 ஆயிரம் மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.8,000 நிவாரணமாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தடைக்காலத்தை மீறி மீன்பிடிக்க சென்றால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தம் சட்டம் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களின் வரத்து குறையும். இதனால் மீன்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications