Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணிகரம்.. சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை.. வைரம், தங்கத்தை அள்ளி சென்றது எப்படி?

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் ஷட்டரை வெட்டி எடுத்து 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஜூவல்லரியில் மர்மநபர்கள் தங்கம், வைரம் என மொத்தம் 9 கிலோ நகைககைளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசிடம் இருந்து தப்பிக்க இந்த கும்பல் சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளது. இதுதொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(36). இவருக்கு அங்கு 2 மாடிகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதில் 2வது தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் முதல் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு ஸ்ரீதர் தனது நகைக்கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 ஷட்டரில் பெரிய ஓட்டை

ஷட்டரில் பெரிய ஓட்டை

அதாவது நகைக்கடையின் முன்பக்க ஷட்டரில் ஒரு ஆள் உள்ளே சென்று வருவதற்கு வசதியாக பெரிய ஓட்டை போடப்பட்டு இருந்தது. வெல்டிங் மெஷின் அல்லது கியாஸ் கட்டர் கொண்டு மர்மகும்பல் கொள்ளையடிப்பதற்காக ஷட்டரில் ஓட்டை போட்டது தெரியவந்தது. இதனால் பதறிப்போன ஸ்ரீதர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடைக்குள் அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன.

9 கிலோ கொள்ளை

9 கிலோ கொள்ளை

லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து தங்கம், வைர நகைகளை மர்மகும்பல் அள்ளிச்சென்றது தெரியவந்தது. அதோடு கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது. இந்த கும்பல் மொத்தம் 9 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சிசிடிவி ஆய்வு

சிசிடிவி ஆய்வு

சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?

போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?

இதுபற்றி சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு கூறுகையில், ‛‛ஷட்டர், லாக்கரை கட் செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை பார்த்து விசாரித்து வருகின்றனர். இப்போது தான் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உள்ளார். அவரிடமும், கடையில் பணி செய்யும் ஊழியர்களின் விபரங்களும் பெற்று அவர்களிடமும் விசாரை நடத்தப்படும். குற்றத்தில் ஈடுபட்டவரை விரைவில் கைது செய்து விடுவோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+