அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் சந்தித்த பெரிய மாற்றம்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்து வந்தன. தற்போது பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படுவது மூலம் உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு பேர், எத்தனை மணிக்கு பணிக்கு வருகின்றனர். தாமதமாக எவ்வளவு பேர் வருகின்றனர் என்பதை தன்னிடம் உள்ள கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அமைச்சர்கள், அலுவலகங்கள் உள்ளன.

சென்னை தலைமைச்செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை 10 தள கட்டிடத்தில், 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த அலுவலகங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.45 மணிவரை பணிநேரம். உணவு இடைவேளை அரை மணி நேரமாக உள்ளது.
இந்நிலையில், மனிதவள மேலாண்மைத்துறையில் , வருகைப்பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டு அறியும் தொடுதிரை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று தேதி முதல் பயோமெட்ரிக் (Biometric) அல்லது முக அங்கீகார அடிப்படையிலான வருகைப்பதிவைக் கட்டாயமாக்கியுள்ளது. அந்த துறையின் அலுவலர்கள் வருகை இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் இதே முறை வருகைப்பதிவேடு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்னதாக தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் மற்றும் பேஸ் ஐடி மூலம் வருகை பதிவேட்டு முறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
காலை 10 மணிக்கு முன்னர் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் வருகையை பயோ மெட்ரிக்கில் பேஸ் ஐடி மூலமும், பதிவேடு மூலமும் கணக்கிட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அதன்படியே நடைமுறைக்கு வந்துள்ளது.
-
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!














Click it and Unblock the Notifications