கை பம்பு அடித்து கை வலிக்கிறதா?.. இதோ ஜாலியா தண்ணீர் இரைக்க புதிய ஐடியா! வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: கை பம்பு அடித்து கை வலிக்கிறதா. இதோ ஹாயாக தண்ணீர் இரைக்க புதிய ஐடியா ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் கைபம்பு அடித்து கையே விட்டு போகிறது.
அடுத்த வாரத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும். அந்த நேரத்தில் தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுவர் என பெற்றோர் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!
இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகிறது. அதில் ஒரு பள்ளியில் ஒரு மாணவி தண்ணீர் குழாயை திறக்கிறார். அதிலிருந்து வெறும் காத்துதான் வருகிறது. உடனே திரும்பி பார்க்கிறாள். பள்ளி மைதானத்தில் ஒரு குழுவினர் ஜீசா விளையாட்டு சாதனத்தை பொருத்துகின்றனர்.
இதை மற்ற மாணவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அப்போது இரு மாணவர்கள் சீசா விளையாடுகின்றனர். உடனே பக்கத்தில் உள்ள ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆர்பரிக்கின்றனர்.
இது போல் பள்ளிகளில் மாணவர்களை விளையாட விட்டு தண்ணீர் வரவழைத்து அவற்றை சேமித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.