யாரெல்லாம் ஆதார் கார்டு + பான் கார்டு இணைக்க தேவையில்லை தெரியுமா? "இவங்க மட்டும்" கட்டாயம்.. மேஜர்
சென்னை: பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் என்னாகும் தெரியுமா? யாரெல்லாம் இணைக்க தேவையில்லை தெரியுமா? இதுகுறித்து வருமான வரித்துறை அறிவுறுத்துவது என்ன?
பல்வேறு மோசடிகளை கண்காணிக்கவும், அதை தடுத்து நிறுத்தவும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், தேவையில்லாமல் மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதார் கார்டு: அதேபோல, நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
எனவேதான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. அந்தவகையில், தொழிலதிபர்கள், மிகப்பெரிய வேலை செய்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்கக்கூடும் என்பதால், பான் கார்டை ஆதாருடன் இவர்கள் இணைப்பது கட்டாயமாகும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அத்துடன் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.. அரசின் நலத்திட்டங்களையும் பெற முடியாது.
விளைவுகள் என்ன: அதுமட்டுமல்ல, புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பெறுவதும் சாத்தியமில்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளியூர் பயணம் செய்ய முடியாது.. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குவது ரூ. 50,000 அனுமதிக்கப்படாது.. ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள். 50,000 எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது.
அதனால்தான், ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.. கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால், எத்தனையோ முறை, இதற்கான காலக்கெடுவைவும் அரசு நீட்டித்து வந்திருக்கிறது.
காலக்கெடு: ஆனால், தற்போது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.. அந்தவகையில், யாரெல்லாம் பான் கார்டுகளை இணைக்கவில்லையோ, அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும்.
அதேசமயம், பான் கார்டு மற்றும் ஆதார் எண்களை ஒருசிலர் மட்டும் இணைக்க தேவையில்லை.. குறிப்பாக, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை இணைக்க தேவையில்லை. அதேபோல, வருமான வரிச்சட்டத்தின்படி, குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பான் கார்டை இணைக்க வேண்டிய தேவையில்லை.
அவசியமில்லை: அதேபோல, அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் உள்ள தனிநபர் அல்லாதவர்கள் பான் ஆதாரை இணைக்க வேண்டிய தேவையில்லை.. இதற்கு காரணம், அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறப்பு நிபந்தனைகள் காரணமாக, மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதாவது நிறுவனங்கள், அறக்கட்டளைகள் இந்த பான் + ஆதார் அட்டை இணைக்க வேண்டியதில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications