'இன்று மட்டும் நம் விரலில்' திருக்குறள் மாறி இரண்டே வரியில் எச்சரிக்கும் பார்த்திபன்
Recommended Video
சென்னை: மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் திருக்குறள் போல் 2 வரியில் வாக்கின் வலிமை குறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வேலுரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

மக்கள் தாங்கள் விரும்பும் அரசு அமைவதற்காக காலை 7 மணி முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் திரை உலகினர் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று காலை 7.30 மணி அளவில் வெளியிட்ட டுவிட்டில் மக்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லி உள்ளார்.
"எதுவும் நம்ம கையில இல்ல"
— R.Parthiban (@rparthiepan) April 18, 2019
விரக்தி வேண்டாம்! இன்று மட்டும் நம் விரலில்!!!
அதாவது "எதுவும் நம்ம கையில இல்ல" விரக்தி வேண்டாம்! இன்று மட்டும் நம் விரலில்!!! என குறிப்பிட்டுள்ளார்
இதன்படி யாரோ ஒருவரை வாக்களித்து, மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துவிட்டு, அவர் ஒன்றும் செய்யவில்லை என்று ஏங்கும் போது மக்கள் எதுவும் நம்ம கையில் இல்ல, எல்லாம் ஆள்றவங்க கையிலதான் இருக்கு என விரக்தியுடன் பேசுவார்கள். அதை எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ள பார்த்திபன், நாம் கைகளில் மை தடவி ஒரு விரல் புரட்சி நடத்தி சரியான ஒருவருக்கு வாக்களிக்க இன்று நாள் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் போல் இரண்டே வரியில் மொத்த விஷயத்தையும் சொல்லியிருக்கிறார் பார்த்திபன். உஷாராக வாக்களிப்பது மக்களே அது உங்கள் கையில் தான் இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications