Actor Rajesh: கனடாவில் இருந்து வந்த மகள் திவ்யா! நடிகர் ராஜேஷின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள்!
சென்னை: கனடாவில் இருந்து மகள் திவ்யா சென்னை வந்துவிட்டதால் நடிகர் ராஜேஷின் உடலுக்கு இன்று பிற்பகல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. தந்தையின் உடலை பார்த்ததும் திவ்யா கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது. ராஜேஷ் உடலுக்கு நாளை இறுதிச் சடங்குகள் என சொல்லப்பட்ட நிலையில் இன்றே இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன.
பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராஜேஷ் , இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர் என்றால் அது ராஜேஷ்தான் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

அந்த அளவிற்கு ராஜேஷின் நடிப்பில் யதார்த்தம் இருக்கும். கதை நன்றாக இருந்தால் மட்டுமே ராஜேஷ் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால் அவருடைய படத்தை ரசிகர்கள் தைரியமாக பார்ப்பார்கள். அவர்கள் டிக்கெட் வாங்கும் காசு வீண் போகாது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக யூடியூபில் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தெரிவித்து வந்தார். அதுபோல் 99 வயது வரை வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் கூறி வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் துபாய்க்கு ஒரு நிகழ்வுக்காக சென்றிருந்த அவர் கடந்த 28ஆம் தேதி சென்னை திரும்பினார். அவருக்கு ஊரில் இருந்து வந்ததிலிருந்தே சளி தொல்லை, நெஞ்சு சளி என இருந்ததாக சொல்லப்படுகிறது.
இது ஊர் விட்டு ஊர் போகும் போது அவருக்கு ஏற்படும் அசவுகரியங்கள் என்பதால் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அதிகாலை ராஜேஷுக்கு அதிக அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தனது மகனையும் தம்பி சத்யனையும் அழைத்தார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அப்போது ராஜேஷின் ஆக்ஸிஜன் அளவு குறைந்திருந்தது. இந்த நிலையில் ராஜேஷை ஆம்புலன்ஸில் ஏற்றியதுமே அவர் இறந்துவிட்டார்.
எனினும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் காலமானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ராஜேஷின் இறப்புக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் போய் அஞ்சலி செலுத்தினார்.
ராஜேஷுக்கு மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். அவருடைய மகன் தீபக், ராஜேஷுடன் வசித்து வந்தார். மகள் திவ்யாவிற்கு திருமணமாகி கனடாவில் வசித்து வருகிறாராம். அவர் வந்ததும் நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என சொல்லப்பட்டது. இதனால் ராஜேஷின் உடல் எம்பார்மிங் எனும் பதப்படுத்துதல் முறைக்காக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஜேஷின் மகள் திவ்யா சென்னைக்கு வந்துவிட்டார். அவர் தனது தந்தையின் உடலை பார்த்ததும் கதறி துடித்தார். திவ்யா வந்துவிட்டதால் இன்று பிற்பகல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications