லிவ்-இன்-டு கெதர்.. காதலன் சித்ரவதை... கொல்லப்போவதாக மிரட்டுறாரு.. பேஸ்புக் லைவில் கதறிய நடிகை
சென்னை: என்னுடைய லிவ்-இன்-டு கெதர் காதலன் என்னை கொல்லப்போவதாகவும், என் மீது ஆசிட்ஊற்றபோவதாகவும் மிரட்டுகிறார் என்று பேரன்பு பட நடிகை அஞ்சலி அமீர் பேஸ்புக் லைவில் கதறியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் அஞ்சலி அமீர். இவர் தமிழில் பேரன்பு படத்தில் நடித்துள்ளார். இதேபோல் மலையாள பிக்பாஸிலும் கடந்த 2018ம் ஆண்டு பங்கேற்றார்.
இந்நிலையில் அஞ்சலி அமீர் அண்மையில் தனது பேஸ்புக் லைவில் கண்ணீருடன் பேசியுள்ளார். அதில் அவர் ஒருவருடன் லிவ்-இன்-டு கெதருடன் இருந்ததாகவும் அவர் தன்னை ஆசிட் ஊற்றி எரித்து கொல்லப்போவதாக மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கொல்லப்போவதாக
அந்த வீடியோவில் அஞ்சலி அமீர், தொடர்ந்து தன்னை லிவ்-இன்-டு கெதர் காதலன் டார்ச்சர் செய்து வந்ததாகவும், இதனால் அவருடன் உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்த உடன் அவர் என்னை கொன்று , ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

தற்கொலை முடிவு
தன்னுடைய சேமிப்பில் இருந்து சுமார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 4லட்சம் வரை அவர் பறித்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட டார்ச்சர்களை தாங்க முடியவில்லை என்றும்,தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு
அஞ்சலிக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, அவரது பெற்றோர் கூட இல்லை என்பதால், இந்த பிரச்சனையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் பலர் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பயோகிராபியில்
நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம். இதனிடையே தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை பேஸ்புக் லைவில் சொல்லவில்லை












Click it and Unblock the Notifications