Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமல்லபுரம் அருகே விபத்து நடந்தது எப்படி?.. போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த யாஷிகா ஆனந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நைட் பார்ட்டிக்கு பின் நடந்தது என்ன என்பது குறித்து சுயநினைவு திரும்பியதும் நடிகை யாஷிகா பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

Recommended Video

    Yashika Car Incident - தோழியை கைவிட்ட Yashika | பயங்கர குடி போதை Live Update

    பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலாக வலம் வருகிறார். துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

    இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

    போட்டியாளர்

    போட்டியாளர்

    கடந்த 2018-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் கைவசம் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார்.

    தோழி

    தோழி

    காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் பள்ளம்

    கார் பள்ளம்

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்தது. யாஷிகாவின் கூக்குரல் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச் செட்டி பவானி உயிரிழந்துவிட்டார்.

    மாமல்லபுரம் போலீஸார்

    மாமல்லபுரம் போலீஸார்

    யாஷிகாவுக்கு இடுப்பு, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவருக்கு சுயநினைவு வந்தவுடன் மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

    அதிவேகமாக ஓட்டிய கார்

    அதிவேகமாக ஓட்டிய கார்

    அப்போது அவர் விபத்து நடந்த நேரத்தில் நான் குடித்திருக்கவில்லை. காரை அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரின் முன் இருக்கையில் என்னுடன் அமர்ந்திருந்த பவானி சீட் பெல்ட் அணியவில்லை. இதனால் விபத்து நடந்த போது அவர் தூக்கி வீசப்பட்டார் என யாஷிகா தெரிவித்துள்ளாராம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+