திமுகவை முந்திகிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது ஏன்? எடப்பாடியை புஷ் செய்த அந்த முக்கிய நபர்
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே அதிமுக முதல்கட்டமாக அந்த 5 வாக்குறுதிகளை அளித்ததற்கு காரணம் அந்த நபர் அறிவுறுத்தியதுதான் என தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 17ஆம் தேதி எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக காலை 11 மணிக்கு அதிமுகவின் தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூடினர்.

அப்போது எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி, திடீரென வரும் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய5 வாக்குறுதிகளை அறிவித்தார். அதில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 2000, ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், 125 நாள் வேலை திட்டம் 150 ஆக உயர்வு, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என 5 வாக்குறுதிகளை அளித்தார்.
திமுகவுக்கு முன்பே அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டதற்கு ஒருவர்தான் காரணம். அதாவது கரி நாளில் நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுக கூட கரி நாள் பார்த்துதான் அறிவிப்புகளை வெளியிடும்.
ஆனால் கடவுள் பக்தியுடன் நெற்றி நிறைய விபூதி, குங்குமம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கரி நாளில் அவசரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஜோதிடர்களின் ஆலோசனையின்படிதான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டாராம்.
கடந்த 17ஆம் தேதி சிவராத்திரி, சதுர்த்தி திதி. அதிலும் இது தேய்பிறை சதுர்த்தி திதி. இந்த திதியானது காளிக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் செய்யும் காரியம் தடைகளை நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியானது அதிக பலன்களை அள்ளித் தரும் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி கடந்த 17 ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது 11 மணிக்கு மேல்! அன்றைய தினம் 11 மணி முதல் 12 மணி வரை புதன் ஓரை! அதைத் தொடர்ந்து சந்திர ஓரையும் இருந்தது. இந்த இரு ஓரைகளுமே சுப ஓரைகள். அதனால்தான் ஜோதிடர் அறிவுரைப்படி புதன் ஓரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல் 5-ஐ வெளியிட்டாராம்.
அது போல் அன்றைய தினம் பூராடம் நட்சத்திரம் ஆகும். பூராடம் வாழ்க்கை பூரா போராட்டம் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்கிறார்கள். பூராட நட்சத்திரத்தில் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும் என்கிறார்கள்.
எனவே கடவுள் நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஜோதிடரின் அறிவுரையின்படி இவ்வாறு முக்கிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிப்பும் நல்ல நாளில் வெளியிடுவதுதான் வழக்கம். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications