Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித் பவார் Since 1991..பாராமதியின் பிராண்டாகவே மாறிய பவார்! 9 முறை வென்ற தொகுதியிலேயே மரணித்த சோகம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவரும், மாநிலத்தின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார், இன்று காலை பாராமதி விமான நிலையம் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். இது மாநில அரசியலுக்கும், தேசிய வட்டார அரசியலுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாராமதி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு ஒன்பது முறை வெற்றி பெற்ற நிலையில் அதே தொகுதியிலேயே மரணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, மும்பையிலிருந்து பாராமதி விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில், அஜித் பவார் உட்பட அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர், என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனமானிகள் இருவரும் உயிரிழந்தனர், என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நிகழ்ந்ததும், அஜித் பவாரின் குடும்பத்தினர் உடனடியாக பாராமதிக்கு விரைந்தனர்.ர். விபத்து நிகழ்ந்ததும், அஜித் பவாரின் குடும்பத்தினர் உடனடியாக பாராமதிக்கு விரைந்தனர்.

Ajit Pawar Plane Crash Maharashtra

அஜித் பவார் மரணம்

நிகழ்வு தொடர்பாக மாநில அரசு மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் முழுமையான விசாரணை நடத்த உள்ளன. விபத்தில் உயிரிழந்த அஜித் பவார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனாகவும், அரசியலில் நீண்ட கால அனுபவமுள்ளவர். கட்சிக்குள் ஏற்பட்ட பிளவின் பின்னர், அவர் தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து தனி பிரிவை நிறுவி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தை நீதிமன்றம் வழியாகப் பெற்றார்.

பாராமதி விமான விபத்து

அதன் பின்னர், அவர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக 2010-2014 மற்றும் 2019-2026 வரை பதவி வகித்தார் அவரது அரசியல் வாழ்க்கையில், மாநில நிதித்துறை, மின்சாரம் போன்ற முக்கிய துறைகளை கவனித்து வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே மரணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாராமதி தொகுதி

முதல் முறையாக பாராவதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 1991 ஆம் ஆண்டு அஜித் பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த அஜித் பவர் சட்டசபை தேர்தலில் 1991 ஆம் ஆண்டு பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு பிறகு 1995,1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991 முதல் வெற்றி

1991 மற்றும் 1995 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியவர் அஜித் பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தான் தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு அஜித் பவர் பிரச்சாரத்திற்காக சென்றார். அப்போதுதான் விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் பவரின் மரணம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உரிய விசாரணை

அவரது மரபு எண்ணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநிலங்களில் முதல்வர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மகராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+