அட்சய திருதியை: அதிகாலையிலேயே தங்கம் விற்பனை தொடங்கியது.. நகைக் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!
சென்னை: அட்சய திருதியை தினமான இன்று நகைக் கடைகள் இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. மக்கள் ஏராளமானோர் போட்டி போட்டு தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றி சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அட்சய திருதியை அன்று நகைகள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று மாலை வரை நீடிக்கிறது. அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் காலை 05:41 மணி முதல் பிற்பகல் 02:12 மணி வரை ஆகும்.

அதிகாலையிலேயே நகைக் கடைகள் திறப்பு
இந்நிலையில், இன்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, அதிகாலையிலேயே சென்னையில் உள்ள பல நகைக்கடைகள் திறக்கப்பட்டன. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் இன்று அதிகாலையிலேயே நகைக் கடைகள் திறக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான நகைக் கடைகளில் இன்று சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 5 மணிக்கே நகைக் கடைகளை திறந்து, பூஜைகள் செய்யப்பட்டு அட்சய திருதியை சிறப்பு விற்பனை தொடங்கி உள்ளனர். நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு கவுண்டர்கள்
முன்னதாக சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், "அட்சய திருதியை தினத்தையொட்டி சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, புரசைவாக்கம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உள்ள நகைக் கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்படும்.
பல கடைகளில் கூட்டத்தை சமாளிக்க சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கக் காசுகள், டாலர்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் உள்ளிட்டோர் தாமதமின்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக விரைவு கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன'' எனத் தெரிவித்துள்ளார்.

நகை வாங்குவோருக்கு சலுகை
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் சவரனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் ஏராளமான நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தங்கம் விலை இன்று
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.8,980-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.78,368-க்கு விற்பனை ஆனது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.
இன்று மார்க்கெட் துவங்கிய நிலையில், இன்றும் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இன்று அட்சய திருதியை என்பதால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுவது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
-
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications