Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீங்க எல்லாம் படிச்சு நல்ல நிலைமைக்கு போனும்" அதுதான் மகிழ்ச்சி.. கல்லூரி விழாவில் ஸ்டாலின் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம் என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு சூழல் ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக கல்லூரில் விழாவில் மாணவர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு நான் முதல்வர்.. ஆனால் உங்களுக்கு (கொளத்தூர் தொகுதி மக்கள்) நான் சட்டமன்ற உறுப்பினர். உங்களுடைய அன்பு, வாழ்த்துக்களால் தான் நான் ஹாட்ரிக் வெற்றி பெற்றேன்.

 All of you should study and become better: Chief Minister M.K. Stalins speech among students

மூன்று முறை எம்.எல்.ஏவாக தொடர்ந்து என்னை தேர்வு செய்தீர்கள்.. நீங்கள் எம்.எல்.ஏவாக தேர்வு செய்ததால்தான் நான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறேன். அதனால் நீங்கள் உரிமையோடு கேட்பதை நிறைவேற்றும் கூடுதல் பொறுப்பு உண்டு. எனக்கு வயது 70, ஆனால் 20 வயது மாதிரி இருப்பதற்கு காரணம் நீங்களதான். நீங்களும் படிப்பில் ஆக்டிவாக இருக்கிறீர்கள். இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

பசியோடு வாடாமல்: படிப்பு நமக்கு ஈசியா கிடைப்பது இல்லை.. எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு படிப்பு நமக்கு கிடைக்கிறது. கல்விதான் நம்மை மட்டும் இல்லை நமது தலைமுறையையே முன்னேற்றுவதற்கு அச்சாராமக அமைந்து இருக்கிறது. அதனால்தான் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் கல்வி கற்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

பசியோடு வாடாமல் இருக்கத்தான் காலையில் பள்ளிக்கு வந்தவுடன் காலை உணவுத்திட்டம்... மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வேலைக்கு போக நகர பேருந்துகளில் இலவச பயண திட்டம். உங்களில் பலபேர் இந்த பயணத்தால் பணத்தை மிச்சப்படுத்தி அதை கல்வி செலவிற்கு பயன்படுத்தியிருப்பீர்கள் என்று மனதார நம்புகிறேன்.

நன்றாக படிக்க வேண்டும்: படிக்கும் போது உங்கள் பாடத்திட்டத்தை தாண்டி திறமையை வளர்த்துக்கொள்ளதான் நான் முதல்வன் என்ற அற்புதமான திட்டம். அரசு பள்ளியில் படித்து விட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். படிப்பதற்காகவும் வேலைக்காகவும் வெளியூர் போக வேண்டும் என்றால் பெண்கள் பாதுகாப்பாக தங்கி இருக்க வசதியாக தோழி விடுதிகள் ஆரம்பித்து இருக்கிறோம்.

குடும்ப தலைவிகளாக இருக்கும் சகோதரிகளுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து மாதம் ஆயிரம் வழங்க போகிறோம். இப்படி ஒவ்வொரு கட்டமாக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதைஎல்லாம் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து எதாவது ஒரு சூழ்நிலையில், தருணத்தில் என்னை சந்திக்கும் போது உயரமான பதவியில் இருக்கிறோம்..

யாராலும் திருட முடியாது: இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம் என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு சூழல் ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் பெரியார், அண்ணா,கருணாநிதி கண்ட கனவு... அவர்களின் கனவை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதை விட வேறு பெருமை எனக்கு வந்து சேர முடியாது.

நாம் பெருமை அடைவது ஒருபக்கம் இருந்தாலும் அதைவிட எனக்கு முக்கியம் படிச்சி நீங்கள் பெருமை அடையவேண்டும். உங்கள் பெற்றோர் பெருமை அடையவேண்டும். உங்கள் தாய் தமிழ்நாட்டு பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான். கல்வியை யாராலும் திருட முடியாது. அதுதான் நிலையான சொத்து.. ஆகவே நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+