"அமித்ஷாஜி வருகிறார் என்றாலே இங்கு பயந்து கொள்கிறார்கள்".. ஒரே பேட்டியில் தெறிக்க விட்ட எல்.முருகன்

அமித்ஷாவின் சென்னை வருகை குறித்து எல்.முருகன் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அமித்ஷாஜி வருகிறார் என்றாலே மற்றவர்கள் பயந்து கொள்கிறார்கள்.. அவரது வருகை பலருக்கு பயத்தை தருகிறது" என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் எல்.முருகன் பேசும்போது சொன்னதாவது: "அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 21-ம் தேதி வருகிறார்... இது அரசு முறையிலான பயணம்.. மொத்தம் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக கட்சி சார்பாக அவருக்கு சென்னை விமான நிலையதில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முருகன்

முருகன்

நான் தலைவரான பிறகு, முதல்முறையாக அமித்ஷாஜி வருவதால், சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.. அதேபோல, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 200 பேர் கலந்து கொள்ளும் கூட்டம் நடக்க இருக்கிறது.

 வரவேற்பு

வரவேற்பு

இதேபோல, இன்னொரு கூட்டமும் நடக்க உள்ளது.. பாஜக சார்பில் அமித்ஷாவுடன் நடைபெறும் இந்த கூட்டங்கள் சோஷியல் டிஸ்டன்சுடன் நடத்தப்படும்.. இதைதவிர அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். வெற்றிவேல் யாத்திரையும் நடந்து வருவதால், அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

உத்திரபிரதேசம்

உத்திரபிரதேசம்

அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும்... குறிப்பாக உத்தரப்பிரதேசம் சென்றார்... அங்கு ஆட்சி ஏற்படுத்தினார். அதேபோல் அவர் செல்லும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துகிறார்.. அமித்ஷாஜியின் வருகையானது தமிழக பாஜகவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தரும்... தைரியத்தை தரும், புத்துணர்வை தரும்.. எங்கள் தொண்டர்களுக்கு இன்னுமொரு உத்வேகத்தை தரும்.. அதேபோல பலருக்கு பயத்தை கொடுக்கிறது.. அவர் வருகிறார் என்றாலே மற்றவர்கள் பயந்து கொள்கிறார்கள்" என்றார்.

 வேல் யாத்திரை

வேல் யாத்திரை

இதையடுத்து, முதல்வரை அமித்ஷா சந்தித்து பேச வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், முதல்வருடன் பேச வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்" என்றார். தொடர்ந்து பேசிய முருகன், வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பதற்காக வரவில்லை என்றும் தெளிவுபடுத்தினர். அமித்ஷா வருகை இருப்பதால் 21-ம் தேதி ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+