உள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் தெரியும்... டிடிவி தினகரன் பேச்சு
சென்னை: அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கும் வியூகங்களை தவிடுபொடியாக்கி, மீண்டும் எழுச்சியோடு செயல்படுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் பொருளாளர் ரங்கசாமியின் மகன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், நாளை நமதே என்ற எண்ணத்தோடு, தமிழகத்தின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, நடந்து முடிந்த தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் அமமுகவுக்கு ஒரு வாக்குகூட பதிவாகாதது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்படும் என்றார். அமமுக பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சி சரியாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
வருகிற ஜூன் 1-ந்தேதி கூட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஆகியோருடன் முதல் கட்டமாக ஆலோசனை நடக்கிறது. அதன் பிறகு அடுத்த கட்ட நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக தயாராவோம என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது நான் அளித்த வாக்குகள் என்னவானது என்று பல கிராமங்களில், நகரங்களில் மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் வாக்களித்த பூத்தில் அ.ம.மு.க.விற்கு 14 வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. நாங்கள் அ.ம.மு.க.விற்குதான் வாக்களித்தோம் என்கிறார்கள்.
ஆனால் பதிவான சதவீதம் எவ்வளவு என்று தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் உள்ளாட்சி தேர்தல் வரும்போது எங்களின் வாக்கு சதவீதம் என்ன என்பது உங்களுக்கு தெரியப்போகிறது என்றும் கூறினார்.
30 தொகுதியில் 588 பூத்களில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications