Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் சந்திக்கிறார் சரி! யூசுப் அலியை சபரீசன் ஏன் சந்திக்க வேண்டும்? அண்ணாமலை கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தின் போது சந்தித்த முதலீட்டாளர்களை கடந்த பிப்ரவரி மாதமே அவரது மருமகன் சபரீசன் எதற்காக சந்தித்தார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    Annamalai VS RS Bharathi | முதல்வரின் துபாய் பயணம் விமர்சனம்

    சென்னை திநகரில் செய்தியாளர்களை சந்தித்த போது, முதல்வரின் குடும்பத்தினர் பிப்ரவரி 2ஆம் தேதி துபாய்க்கு விமான பயணம் செய்ததற்கான ஆதாரங்களை அண்ணாமலை காட்டினார்.

    இதையடுத்து அண்ணாமலை கூறுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி பால்கன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவன விமானத்தில் சென்னையிலிருந்து திமுகவை சேர்ந்த உதயநிதி, சபரீசன், கார்த்திகேயன், திமுகவின் குடும்ப ஆடிட்டர் சண்முகராஜ் உள்பட 9 பேர் துபாய் சென்றனர்.

    முதல்வர் மருமகன்

    முதல்வர் மருமகன்

    அங்கு முதல்வரின் மருமகன் சபரீசன் நடத்திய கூட்டத்தில் ஸ்டாலின் சந்தித்த லூலூ குரூப்ஸ் தொழிலதிபர் யூசுப் அலியும் பங்கேற்றிருந்தார். முதல்வர் துபாய் சென்று திரும்பியதும் தமிழகத்திற்கு 6100 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். அதில் 4,600 கோடி ரூபாயை துபாயில் இருக்கும் இரு தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ஆசாத் மூப்பன் முதலீடு செய்கிறார்கள்.

    யூசுப் அலி

    யூசுப் அலி

    அதில் 70 சதவீதம் யூசுப் அலிதான் முதலீடு செய்கிறார். பிப்ரவரி 2 ஆம் தேதியே துபாய் சென்று சபரீசன் கூட்டம் போட்ட ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். திமுக அமைப்புச் செயலாளர் பாரதி, முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 100 கோடி ரூபாய் முதல்வர் பொது நிவாரணத்திற்கு செலுத்த வேண்டும் என எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சந்திக்க தயார்

    சந்திக்க தயார்

    நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். அண்ணாமலை அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கிஇருக்கிறார் என்றும் பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் சென்னை எண்ணூர் மின் திட்டத்தை பிஜிஆர் நிறுவனத்திற்கு தான் வழங்க வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்.

    பிஜிஆர் நிறுவனம்

    பிஜிஆர் நிறுவனம்

    அதை ஏற்று மின்வாரியம் பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குகிறது. இதற்கு முதல்வர் பதில் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தான் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் ஷாப்பிங் மால் கட்ட போவதாக தெரிவிக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் மோட்டார் வாகன தயாரிப்பு என பல தொழிற்சாலைகள் அமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.

    ஆதாரங்கள் இருக்கே- பதில் எங்கே?

    ஆதாரங்கள் இருக்கே- பதில் எங்கே?

    மால் கட்டுவதை பெருமையாக நினைக்கும் முதல்வரை தமிழகத்தில்தான் பார்க்கிறேன். ஆதாரங்களை வைத்து தான் அனைத்து கேள்விகளையும் கேட்கிறோம். அதற்கு பதில் தர வேண்டுமே தவிர தரக்குறைவாக பேசுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 9 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றி வந்திருக்கிறேன். சொந்த கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாதவர்கள் எல்லாம் என்னை சுய விளம்பரத்திற்கு பேசுவதாக கூறுகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+