Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Power னா என்ன?.. எனக்கு எப்படி கிடைத்தது?.. "குழந்தைகளுக்கு" ஆன்லைன் கிளாஸ் எடுத்த அன்னபூரணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகம் என்றால் என்ன, தனக்கு எப்படி சக்தி கிடைத்தது என்பது குறித்து காணொலியில் பக்தர்களுடன் பேசிய வீடியோவை தற்போது பேஸ்புக்கில் அன்னபூரணி வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Power னா என்ன?.. எனக்கு எப்படி கிடைத்தது?.. குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸ் எடுத்த அன்னபூரணி!

    ஆதிபராசக்தியின் அவதாரமாக அவரது பக்தர்களால் கருதப்படும் அன்னபூரணி அரசு அம்மா, இயற்கை ஒளி அறக்கட்டளை மூலம் கடந்த 2020 நவம்பர் 20 ஆம் தேதி பேசிய காணொலி காட்சி அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் ஆன்லைன் மூலம் வரும் அவர் அனைவருக்கும் வணக்கம் என்கிறார். அதற்கு ஆன்லைனில் இருப்பவர்கள் வணக்கம் குருவே என்கிறார்கள். அன்னபூரணி தனது பேச்சை தொடர்கிறார். எனது இயற்கை ஒளி வீடியோவை நேரில் பார்ப்பவர்கள் எனது உடையை பார்த்துவிட்டு நான் ஆன்மீகவாதியா என கேள்வி எழுப்புகிறார்கள். ஆன்மீகத்திற்கு எனக்கு சம்பந்தமில்லாத மாதிரி இருப்பதாக கேட்கிறீர்கள்.

    யார் அன்னபூரணி

    யார் அன்னபூரணி

    என்னால் ஒவ்வொருத்தருக்கும் விளக்க முடியாது. இப்போது சொல்கிறேன் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது யதார்த்தம், ஆன்மீகத்திற்கும் வெளி வேஷத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஆன்மீகம் முழுக்க முழுக்க உள்தன்மை சார்ந்தது. வெளிவேஷத்தை பார்த்துவிட்டு அதுதான் ஆன்மீகம் என அடிமையாகியுள்ளீர்கள். அதனால்தான் உங்களுக்கு இந்த சந்தேகம் வருகிறது.

    ஆதிபராசக்தி அவதாரமா

    ஆதிபராசக்தி அவதாரமா

    இயற்கை என்றால் என்ன, இறைவன் என்றால் என்ன, தன்னை எப்படி உணர வேண்டும், இயற்கையை எப்படி உணர வேண்டும் என நான் பேசுவதை உள்வாங்குங்கள். ஆன்மீகவாதி எப்படி இருக்க வேண்டும் என லிஸ்ட் போட்டு வைத்திருப்பீர்கள், அதற்கு பொருந்தும்படி வெளிவேஷம் போட்டுக் கொண்டு இருப்பவர்கள் உங்களுடைய உள்தன்மையை மாற்றி, உங்களுக்கு ஆன்மீக அனுபவங்களை கொடுத்து, உங்களுடைய வாழ்க்கையை உருமாற்றி, உங்களை அந்த முழுமையில் நிலை பெற வைக்க முடிகிறதா என சொல்லுங்கள்.

    ஆன்மீகம் என்றால் என்ன?

    ஆன்மீகம் என்றால் என்ன?

    வெளிவேஷம் போட்டுக் கொண்டு ஆன்மீகம் பற்றித்தானே பேசுகிறார்கள். அதனால் என்ன பயனடைந்தீர்கள். வெளிவேஷம், வெளி அடையாளங்கள், நடிப்பு அத்தனையையும் தூக்கி வீசிவிட்டு நீங்கள் நீங்களாக இருப்பதுதான் ஆன்மீகம். இயற்கை ஒளி உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களை கொடுத்தது, எப்படி உணர வைத்தது, எப்படி நிலை பெற வைத்தது என்பதை பாருங்கள். நான் என்னுடைய இயல்பில் இயற்கை கொடுத்த வாழ்க்கையை அனுபவித்து கொண்டாடி கிட்டு இயற்கை கொடுத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

    குருவை ஆராயாதீர்கள்

    குருவை ஆராயாதீர்கள்

    நான் யாருக்காவும் என்னை மாற்றிக் கொண்டு வெளி வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை. சத்தியம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது. ஆன்மீகம் என்றால் என்னனே தெரியாமல் ஆன்மீகவாதியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் நான் என்ன பேசுகிறேன் என்பதை உள் வாங்காமல் எனது வெளிதோற்றத்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குருவின் வெளிதோற்றத்தை ஆராய்ச்சி செய்பவர்கள் ஆன்மீகத்திற்கு தகுதியானவர்கள் இல்லை.

    அன்னபூரணி

    அன்னபூரணி

    என்னிடம் பேசும்போதே ஒருவருக்கு மாற்றம் வருகிறது. உடனே உங்களுக்கு இந்த பவர் எப்படி வந்தது என கேட்கிறார். பவர் கிடைக்க நான் எதையும் செய்யவில்லை. இயற்கை செயல்படுகிறது. அதற்கு நான் ஒத்துழைக்கிறேன். உடல் இரண்டாக இருந்தாலும் உயிர் ஒன்றாக தான் நானும் அரசுவும் இருந்தோம். பின்னர் இயற்கையே எங்களை ஓர் உயிராக்கியது. எங்களுக்கு இதற்காகவே இந்த பிறவி தரப்பட்டது. இயற்கையை அறிவால் ஆராய்ச்சி செய்ய முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும் என அந்த வீடியோவில் அன்னபூரணி பேசியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+