கருணாஸுடன் மோதிய டிசி அரவிந்தன், திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர்!
சென்னை: தமிழகத்தில் இன்று, 61 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அ்தில் எம்எல்ஏ கருணாஸ், விமர்சனத்திற்கு ஆளான துணை ஆணையர் அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளதும் ஒன்றாகும்.
முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை சட்டசபை உறுப்பினருமான கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் தொனியில் பேசினார்.

காக்கிச் சட்டை
கருணாஸ் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் அதிகாரிகள் குறித்துப் பேசும்போது, காக்கிச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வாருங்கள், பார்த்துவிடலாம் என்று கருணாஸ் ரொம்பவே ஆவேசமாக பேசியிருந்தார். முதல்வர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய நடிகர் கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன.

கைது செய்யப்பட்ட கருணாஸ்
எனவே, வன்முறையைத் தூண்டும் விதமாகவும் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதே மாதம் 23ம் தேதி அதிகாலையிலேயே, சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் சென்ற போலீசார், கருணாசை எழுப்பி கைது செய்து கொண்டு சென்றனர்.
இதையடுத்து கருணாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தாக்கிய முக்குலத்தோர் புலிப்படை
இதேபோல காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என்று முக்குலத்தோர் புலிப்படை மற்றும் 16 அமைப்புகள் சார்பில் தர்ணா நடைபெற்றது. போராட்டத்தின் போது ஐபிஎல் போட்டியை காண வந்த ரசிகர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதுகுறித்தும் கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

துணை கமிஷனர்
கருணாஸ் கட்சிக்காரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், காவல்துறையினருக்கு போகும் வழக்குகளை இடையில் மறித்து கட்ட பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கும் அளவுக்கு போய்விட்டதாகவும், தி.நகர் துணை ஆணையராக இருந்த அரவிந்தனுக்கு தகவல் போனதால், கட்ட பஞ்சாயத்து செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டதாகவும், போலீஸ் நடவடிக்கையால் ஆத்திரமடைந்து இப்படி ஒரு கூட்டத்தை போட்டு, அரவிந்தனை கருணாஸ் வசைபாடியதாகவும், அப்போது சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

டிரான்ஸ்பர் எச்சரிக்கை
மேலும், "ஏற்கனவே அரவிந்தனை வேறு ஊருக்கு மாற்றட்டுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் தான் தமிழகத்தை சேர்ந்த அதிகாரியாக உள்ளார், சின்ன பையனாக உள்ளார். அவரை டிரான்ஸ்பர் செய்ய வேண்டாம் என்றேன். அவர் யூனிபார்மை கழட்டாமல் விடமாட்டேன்" என்று கருணாஸ் பேசியதாக ஆடியோக்களும் வைரலாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications