Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஷியில் டாஸ்மாக்.. விலையால் "தள்ளாடுது" மதுபாட்டில்.. கொட்டபோகும் பணம்.. நாளை தமிழக அரசு அறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல்கள் பரபரத்த நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு பெருகி வருகிறது. மொத்த நிதி ஆதாரத்தில் 3.ல் ஒரு பங்கு வருமானம், இந்த டாஸ்மாக், மதுக்கடைகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

Are these the reasons for Tasmac liquor price hike and beer price hike rs10 by Tamil Nadu Government soon

நிதிச்சுமை: தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

இந்நிலையில், அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த போவதாவும், டாஸ்மாக் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்தன.

பீர் பாட்டில்: காரணம், மூலப்பொருட்களின் விலை உயர்வால், மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.. அதனால்தான், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. மது பாட்டிலுக்கான விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், மதுபானங்களின் புதிய விலை உயர்வு நாளை முதல் அதாவது பிப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்கிறார்கள்.

அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆஃப் பாட்டில் ரூ.20 அதிகரிக்அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.. பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்வதாக தெரிகிறது.

எதிர்பார்ப்பு: இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்கிறார்கள்.. இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடந்த, 2022 - 23ல் மது வகைகள் மீதான ஆயத்தீர்வை வாயிலாக தமிழக அரசுக்கு 10,401 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்ததாம்.. அதேபோல, மதிப்பு கூட்டு வரியாக, 33,697 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆக மொத்தம், 44,098 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நாளை முதல் மதுபானம் விரல உயரும் பட்சத்தில், 2400 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என கணக்கீடப்படுகிறதாம். இதனால் குடிமகன்கள் கலங்கி போயுள்ளனர்..

எட்டாக்கனி?: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இத்தனைக்கும் டாஸ்மாக் கடைகளை குறைத்தாகிவிட்டது, டாஸ்மாக் நேரத்தையும் குறைத்தாகிவிட்டது.. ஆனாலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள கிராக்கி எகிறி கொண்டே போகிறது. ஆக.. இதெல்லாம் பார்த்தால், மதுவிலக்கு என்பது நமக்கு கடைசிவரை கனவுதான் போல??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+