பெரிய விஷயம் நடக்க போகுது? சர்வதேச அளவில் வரப்போகும் பொருளாதார மந்த நிலை? பயமுறுத்தும் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை வரப்போவதாக பொருளாதார வல்லுனநர்கள் பலரும் எச்சரித்து வரும் நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் டிரம்ப் அளித்த பதிலில், நான் பெரிய விஷயம் செய்துகொண்டு இருக்கிறேன். நாம் பெரிய விஷயம் செய்யும் போது.. பெரிய விஷயங்கள் நடக்கும். அதற்காக பொருளாதார மந்த நிலை வரும் என்று என்னால் சொல்ல முடியாது. இது போன்ற விஷயங்களை கணிக்க முடியாது.. நான் கணிக்க விரும்பவில்லை என்று பயமுறுத்தும் வகையில் பேசி உள்ளார்.

gold rate Bitcoin

பொருளாதார மந்தநிலை பற்றி அமெரிக்க அதிபராக வராது என்று சொல்லாமல்.. அவர் இப்படி பேசி இருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சரியும் மார்க்கெட்

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர் வர்த்த போர் காரணமாக.. அமெரிக்க மார்க்கெட்டில் 1 ட்ரில்லியன் டாலருக்கும் மேல் சரிவு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார்

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.

மிகப்பெரிய சிக்கல்

ஏற்கனவே அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

டிரம்ப்பின் செயலால்.. அமெரிக்கா மிகப்பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. கிட்டத்தட்ட சர்வதேச அளவில் வர்த்தக போர் மூண்டு உள்ளது. பனிப்போருக்கு பின்பாக மிக மோசமான வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் மார்க்கெட்டில் இதனால் பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மார்க்கெட் மோசம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர் வர்த்த போர் காரணமாக.. அமெரிக்க மார்க்கெட்டில் 1 ட்ரில்லியன் டாலருக்கும் மேல் சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.95 கோடி கோடி ஆகும். வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது.

அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+