ஜெயலலிதா மரண விசாரணை.. ஓ.பி.எஸ்-க்கு சம்மன்.. ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி
வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையனையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், கார் ஓட்டுனர்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. விசாரணை தொடர்பாக தமிழக உள்துறைக்கும் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என கூறி சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி கட்சியை உடைத்தார். அதன் பின்பு தினகரன் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையனையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications