ஜெயலலிதாவின் லண்டன் சிகிச்சையை முறியடித்த சசிகலா- உடந்தையாக விஜயபாஸ்கர்-ஆறுமுகசாமி கமிஷன் 'ஷாக்'
சென்னை: ஜெயலலிதாவின் லண்டன் சிகிச்சை முயற்சிகளை சசிகலா முறியடித்தார்; சசிகலா, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒரு கருவியாக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் செயல்பட்டார் என ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டடு. இந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் மீது கூறப்பட்டுள்ளதாவது: எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வருவதில் அவருக்கு சுகாதாரத் துறை செயலாளர் துணையாக இருந்தார். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சுகாதாரத் துறைச் செயலாளர் எழுத்துப்பூர்வ அறிக்கை ஏதும் அளித்துள்ளார்களா என்று அவரிடம் கேட்ட போது, அந்தக் கேள்வி தனக்குப் பொருந்தாது என பதிலளித்தார்.

விஜயபாஸ்கரிடம் கேள்வி
மறைந்த முதல்வருக்கு எந்த வகையிலான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளர், சசிகலா ஆகியோரிடம் கேட்டுத்தான் அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்பது தவறு. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஒருமனதாக முடிவெடுத்தார்களா என்ற கேள்விக்கு ஆம் என பதிலைத்தார் விஜயபாஸ்கர்.

வெளிநாட்டு சிகிச்சை
ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதாவை அழைத்துச் சென்றிருக்க முடியுமா? டாக்டர் ரிச்சர்ட் பீலே அவருடன் செல்ல தயாராக இருக்கிறேன்; தமது லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என கூறினாரே என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், தம்பிதுரை ஆகியோரும் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தயாராக இருந்தனர். ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர். அதனால் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.

அப்பல்லோவுக்கு சர்ப்போட்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தேவையான முறையான முயற்சியை விஜயபாஸ்கர் எடுக்காதது வியக்கத்தக்கது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், ஒரு தகுதி வாய்ந்த மருத்துவராக இருந்தும் நோயாளியின் மருத்துவ நிலை, மருத்துவ விதிமுறைகள் போன்றவற்றை புரியும் திறமை இருந்தும் தனது மனதையும் அறிவையும் அவர் பயன்படுத்தாது ஏன் என்பது ஆச்சரியமளிக்கிறது. அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளித்தனர் என ஆணித்தரமாக கூறினார் விஜயபாஸ்கர்.

முக்கியமான கருவி விஜயபாஸ்கர்
உறவினர்களற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இறுதிநாள் வரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை முறியடித்து சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவியாக திகழ்ந்தார் விஜயபாஸ்கர். அப்பல்லோ சிகிச்சையில் ஆஞ்சியோ செய்வதை தவிர்ப்பதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உறுதியாக செயல்பட்டனர். இவ்வாறு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications