பெங்களூரில் மோசமான வானிலை.. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்.. பயணிகள் அவதி!
சென்னை: பெங்களூரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் விமான நிலையத்தில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், கோலாலம்பூர், பாங்காக்கில் இருந்து வந்த 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நேற்று சென்னையில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடித்தன. பெங்களூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி,
கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 விமானங்கள் வானில் வட்டமடித்தன. சென்னையில் மழை சற்று ஓய்ந்த நிலையில் ஒன்றின் பின் ஒன்றாக விமானங்கள் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications