பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னையில் பதற்றம்!
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்டாங்கை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த ஆம்ஸ்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications