ஜனநாயகன் ‘லீக்’ விவ​காரம்: எடிட்டர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. கைதான 9 பேருக்கும் ஜாமீன் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் கசிய விட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல, முன் ஜாமீன் கோரிய எடிட்டர் உமா சங்கரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் ரிலீஸாக இருந்த படம் ஜனநாயகன். நடிகரும், தவெக தலை​வரு​மான விஜய் நடித்​துள்ள 'ஜனநாயகன்' படத்​துக்கு தணிக்கை சான்று கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கலால் மறு ஆய்​வுக்​காக தணிக்கை வாரி​யத்​திடம் நிலு​வை​யில் உள்​ளது.

Bail Pleas Rejected in Jana nayagan Leak Case Editor Uma Shankar Also Denied Relief

இந்த படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழு முன் இருக்கும் நிலையில் ஏப்ரல் 3 ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம், புகார் அளித்த நிலையில் 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனநாயகன் படம் இணை​யத்​தில் கசிந்​தது தொடர்​பாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்​பில் அளிக்​கப்​பட்ட புகாரின்​ பேரில், சென்னை சைபர் கிரைம் போலீ​சார் சிலரை கைது செய்​துள்​ளனர். இவ்​வழக்​கில் போலீ​சா​ரால் தேடப்​பட்ட திருவேற்காட்​டைச் சேர்ந்த உமாசங்​கர் என்​பவர், முன்​ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை, நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நடந்​தது. உமாசங்​கர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​ க​னக​ராஜ், மனு​தா​ரர் ஜவுளிக்​கடை நிறு​வனம் ஒன்​றில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். அவருக்​கும் இந்த சம்​பவத்​துக்​கும் எந்த தொடர்​பும் இல்​லை என வாதிட்​டார்.

படத்​த​யாரிப்​புக்​குழு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணியன் மற்றும் சைபர் கிரைம் போலீ​சார் தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்கறிஞர் கே.எம்​.டி.​முகிலன் ஆகியோர் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். அவர்கள் வாதிடு​கை​யில், "மிகப்​பெரிய பட்​ஜெட்​டில் எடுக்​கப்​பட்ட ஜனநாயகன் படத்தை சட்​ட​விரோத​மாக இணை​யத்​தில் வெளி​யிட்​ட​தில் உமா சங்​கருக்​குத்​தான் முக்​கிய பங்கு உள்​ளது.

உதவி எடிட்​ட​ராக பணி​யாற்​றிய நபரும், அவரது சகோ​தரரும் ஜனநாயகன் படத்தை திருடி வந்து மனு​தா​ரரிடம் அளித்​துள்​ளனர். அவர்​தான் அதை இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்து பகிர்ந்துள்ளார். இதற்கு பின்​னணி​யில் வேறு யார் யார் உள்ளனர் என்​பதை, உமாசங்​கரை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரித்​தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே முன்​ஜாமீன் அளிக்​கக்​கூ​டாது" என வாதிட்​டனர்.

இதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரர் மீதான குற்​றச்​சாட்​டு தீவிர​மானது எனக்​கூறி, முன்​ஜாமீன்​ கோரிய உ​மாசங்​கரின் மனுவை தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டுள்ளார்​.

அதேபோல, இந்த வழக்கில் ஸ்ரீநாத், பாலகிருஷ்ணன், ருத்ரன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் அளிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில், இந்த வழக்கிற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. போலீசார் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வக்கீல் தேவராஜன், பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையத்தில் வெளியிடப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலன் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கூறுகையில், சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டதால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், குற்றச்சாட்டுகளின் தீவிரம், அவற்றின் தன்மை, புலன் விசாரணையின் தற்போதைய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+