ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை! இந்திய ரயில்வே மீண்டும் அறிவிப்பது ஏன்?
சென்னை: ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன், லேப்டாப், டேப், பவர் பேங்க் உள்ளிட்டவைகள் சார்ஜ் போட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது பழைய உத்தரவாச்சே! இதை ஏன் தற்போது விளக்கியுள்ளார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கான காரணத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஃபேன், லைட் இருப்பது போல் சார்ஜ் போடும் பிளக் பாயிண்டுகளும் இருக்கும். இதில் செல்போன்கள், மடிக்கணினிகள், டேப், லேப்டாப், பவர் பேங்க், ஏர் டோப்ஸ், ப்ளூடூத் உள்ளிட்டவைகளை சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.
இது போல் ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்களில் ஒவ்வொரு ஜன்னலோர சீட்டுகளிலும் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அதை பயன்படுத்தி அங்கு அமர்வோர் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இந்த நிலையில் சில சமயம் இரவு நேரங்களில் மின் சாதன பொருட்களுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பயணிகள் தூங்கிவிடுவதால் அது முழுமையாக சார்ஜ் ஏறிய பிறகும் சார்ஜை அணைக்காமல் விடுவதால் திடீரென மின் கசிவு, ஷார்ட் சர்கியூட் உள்ளிட்ட காரணங்களால் வெடித்து ரயிலில் தீவிபத்து ஏற்படுகிறது.
இது போன்ற அபாயகரமான நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜ் போடுவதற்கு நேரக் கட்டுப்பாட்டை இந்திய ரயில்வே கொண்டு வந்தது. அதன்படி ரயிலில் பயணிப்பவர்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே செல்போனை சார்ஜ் செய்ய முடியும்.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயிலில் இருக்கும் பிளக் பாயிண்டுகளை யாரும் பயன்படுத்த முடியாது. அதற்கு மின்சாரம் வராது. இந்த நிலையில் இதுகுறித்து பல முறை அறிவித்தும் தொடர்ந்து இரவு நேரங்களில் பிளக் பாயிண்டுகளில் மின்சார இணைப்பு வருவதில்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்தியுள்ளது.
ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிளக் பாயிண்டில் மின்சாரம் இருக்காது. ரயில்களில் தீவிபத்துகளை தடுக்கும் நோக்கில் செல்போன்களுக்கு சார்ஜ் போட தடை விதிக்கப்பட்டுள்ளது என மீண்டும் ஒரு முறை இந்திய ரயில்வே விளக்கியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications