புத்தக பிரியர்களுக்கு குட் நியூஸ்... பிப்.24 முதல் மார்ச் 9 வரை சென்னையில் புத்தக கண்காட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 44-வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பபாசி அறிவித்து உள்ளது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெற உள்ளது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலையொட்டி புத்தக கண்காட்சி பிரமாண்டமாக நடைபெறும்.700-க்கும் மேற்பட்ட புத்தகக்கடைகள், பல லட்சம் தலைப்பிலான நூல்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் வருகை என்று பபாசி நடத்தும் சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும்.

bapasi has announced Book Fair in Chennai from Feb 24 to March 9

இதற்காகவே ஆண்டுமுழுவதும் காத்திருந்து புத்தகங்கள் வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், இந்த ஆண்டு இதுவரை அந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.இதற்காக புத்தக பிரியர்கள் ஏங்கி தவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் 44-வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என்று பபாசி அறிவித்து உள்ளது.

இந்த நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பபாசியின் இந்த அறிவிப்பால் புத்தக பிரியர்கள் குஷியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+